NEET தேர்வு எழுதியோருக்கு முடிவுகள் எப்போது? அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வு முடிவுகள் 2022:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
இந்திய பெண்களுக்கு WFH திட்டம் அமல்? மத்திய அரசு விளக்கம்!
அதனை தொடர்ந்து கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவில் மட்டும் 497 நகரங்களில் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுதினர். இதில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 18 நகரங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்வானது தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வின் விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்