அக்டோபர் மாதம் முதல் WhatsApp பயன்படுத்த தடை? ஷாக் அறிவிப்பு!
வாட்ஸ் ஆப் நிறுவனம் ஆப்பிள் ஐபோன்களில் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் ஐபோன் பயனர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இவர்கள் இனி வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதும் கேள்வி குறியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப்:
வாட்ஸ் ஆப் நிறுவனம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் பயனாளர்கள் தாங்களாகவே யாருக்கும் தெரியாமல் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து வெளியேறும் வகையிலான அப்டேட் வந்துள்ளது. அதனை தொடர்ந்து ஒரு முறை மட்டும் பார்க்கக்கூடிய மெசேஜ்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்கவும் முடியும். தற்போது முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு மட்டுமே அக்டோபர் 24 ம் தேதி முதல் வாட்ஸ்அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்? ராகுல் காந்தி உறுதி!
இதனால் ஐபோன் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வாட்ஸ் ஆப் தனது பயனர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது. அதில் அக்டோபர் 24 க்குள் லேட்டஸ்ட் ஆப்பிள் OS அப்டேட் செய்பவர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆப் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதாவது iOS 10 மற்றும் iOS 11 ஐபோன் பயனர்கள் மட்டும் செட்டிங்ஸ் பகுதியில் சென்று சாப்ட்வேர் அப்டேட் பகுதியில் லேட்டஸ்ட் OS அப்டேட் செய்ய வேண்டும். மேலும் இந்த OS 10 மற்றும் 11 ஆகிய மென் பொருட்கள் ஐபோன் பதிப்புகளில் பரவலாக பயன்படுத்தப்படவில்லை.
இருப்பினும் ஐபோன் 5 மற்றும் 5 சி ஆகிய மாடல்களை பயன்படுத்துபவர்கள் தங்களது சாப்ட்வோரை அப்டேட் செய்ய வேண்டும். மேற்ச்சொம்மா 2 மாடல்களும் இன்னும் iOS 10 மற்றும் iOS 11 அடிப்படையை கொண்டு இயங்குவதால் அவற்றில் வாட்சப் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் அப்டேட் செய்ய முடியாதவர்கள் அவர்களின் டேட்டாக்களை பேக்கப் எடுத்து வைத்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்