WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வதந்தி குறித்து விளக்கம்!!
வதந்திகள் அதிகமாக பரவும், வாட்ஸ்ஆப் செயலியில் தற்போது அது குறித்து புதிய வதந்தி ஒன்று தற்போது பரவி வருகிறது. அந்த வதந்தி குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
வாட்ஸ் ஆப் விளக்கம்:
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளமான வாட்ஸ்ஆப் மூலமாக பல வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் குறித்த வதந்தியே தற்போது தீவிரமாக பரவி வருகிறது. ஏற்கனவே வாட்ஸ்ஆப்பின் புதிய தனியுரிமை கொள்கை குறித்த சர்ச்சைகள் பல உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை (CAA) அமல்படுத்தும் பணி – மத்திய அரசு துவக்கம்!!
அதில் மத்திய அரசின் புதிய ஐடி சட்ட விதிகளின்படி நீங்கள் இன்னொருவருக்கு அனுப்பும் மெசெஜ்களில் காட்டும் டிக் (Tick) அடிப்படையில் அரசு உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்ற செய்தி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது நாம் செய்தி அனுப்பினால் ஒரு டிக் காட்டும். அதன் பின்னர் அவர் ஆன்லைன் வந்தால் இரண்டு டிக் காட்டும். அவர் அந்த செய்தியை படித்து விட்டால் ப்ளூ டிக் காட்டும்.
TN Job “FB Group” Join Now
ஆனால் தற்போது புதிய விதிகளின்படி, 3 ப்ளு டிக் காட்டினால் அரசு உங்களுடைய மெசெஜை படித்ததாக அர்த்தம், அதில் இரண்டு ப்ளூ டிக்கள் மற்றும் மூன்றாவது ரெட் டிக் காட்டினால் அரசு உங்களது மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதேபோல மூன்றுமே ரெட் டிக் காட்டினால் உங்களுக்கு எதிராக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போகிறது என்று அர்த்தமாம். இந்நிலையில் இது முற்றிலும் தவறான செய்தி என வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
Why you banned my whatsapp app now I what open my old phone number whatsapp app can’t