இன்று முதல் கோவையில் கட்டுப்பாடுகள் தீவிரம் – தொழிற்சாலைகளுக்கு சீல்!!
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று முதல் அனுமதியின்றி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொழிற்சாலைகளுக்கு சீல் :
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த வருடம் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டமாக தலைநகர் சென்னை இருந்தது. பாதிப்பு எண்ணிக்கையும், மரணங்களும் தொடர்ந்து உயர்ந்து வந்தது. சென்னைவாசிகள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர். பல்வேறு கட்டுப்பாடுகளும் போலீஸ் கண்காணிப்பும் சென்னையில் அதிகப்படுத்தப்பட்டது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க புதிய சலுகை – அரசு அறிவிப்பு!!
தற்போது இரண்டாம் அலை கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. கடந்த வருடம் கொரோனா பரவல் மையமாக இருந்த சென்னையில் தொற்று குறைந்துள்ளது. ஆனால் கடந்த வருடம் முன்னோடி மாவட்டமாக இருந்த கோவையில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. கோவையில் கடந்த ஒருவார காலமாக தொற்று எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை கூறுகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் கோவையில் ஊரடங்கு விதிகளை கடுமையாக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார. ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்படாத ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவதே கோவையில் தொற்று அதிகரிக்க காரணம் எனவும், கோவையில் மேம்பால பணிகள் 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.