விஜே சித்ரா இறந்த போது கூட ஹேம்நாத் செய்த காரியம் – ரேகா நாயர் ஆதங்கம்! ரசிகர்கள் ஷாக்!
சித்ராவின் மரணம் குறித்தும், சித்ரா இறந்த பிறகு ஹேம்நாத் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்தும், ஹேம்நாத்தின் உண்மை முகம் இது தான் அவரின் முகத்திரையை கிழிக்கும்படியான வீடியோ வெளியாகியுள்ளது.
சித்ராவின் மரணம்:
தற்போதெல்லாம் உலகத்தில் யாரை நம்புவது என்றே தெரியவில்லை. ஒருவரை நம்பி வாழ்க்கையில் இறங்கினால் ஈஸியாக ஏமாற்றிவிடுகிறார்கள். அந்த வகையில் ஏமாற்றப்பட்டவர் தான் விஜே சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்தார். சீரியலில் அறிமுகமான சில நாட்களிலேயே ரசிகர்களின் மத்தியில் பேரையும் புகழையும் பெற்றார். அதற்கு பிறகு ஹேம்நாத் என்பவரை காதலிப்பதாகவும், அவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அனைத்தையும் பதிவிட்டுருந்தார்.
Exams Daily Mobile App Download
இதற்கு பிறகு சித்ரா ஒரு நாள் யாருமே எதிர்ப்பாராத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியானது. யாராலுமே அந்த செய்தியை நம்பவே முடியவில்லை. நம்ப முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை. எதற்காக சித்ரா தற்கொலை செய்திருக்க வேண்டும். தற்கொலை செய்துகொள்ளும் முதல் நாள் வரைக்கும் கூட சித்ரா கலகலப்பாக அனைவரிடமும் பேசியிருக்கிறார். ஒருவேளை கொலை செய்யப்பட்டாரா என்கிற சந்தேகமும் இருந்தது. பின்பு, ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதன் பின்பு, ஜாமினில் வெளியே வந்தார்.
இனி கண்ணம்மாவின் பாரதியாக களமிறங்கும் ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
சித்ரா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது மட்டும் புதிராகவே இருந்தது. சித்ரா இறந்ததை தற்போது வரைக்கும் நம்ப முடியவில்லை. ஹேம்நாத் சித்ராவை நினைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என கூறினார். ஹேம்நாத்தின் உண்மை முகம் தற்போது தான் வெளியே வந்து கொண்டிருக்கிறது. இதுவரை ஹேம்நாத் பல பெண்களை காசுக்காக ஏமாற்றியிருக்கிறார். சித்ரா இறந்த போது கூட அவரது முகத்தில் துளி கூட வருத்தம் இல்லை. சித்ரா இறந்த பிறகு மட்டுமே 11 பெண்களை ஏமாற்றிகொண்டுகிறார் என முதன் முறையாக ரேகா நாயர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.