மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் WFH நடைமுறை? IT நிறுவனங்களின் திட்டம் இதுதான்?

0
மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் WFH நடைமுறை? IT நிறுவனங்களின் திட்டம் இதுதான்?
மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் WFH நடைமுறை? IT நிறுவனங்களின் திட்டம் இதுதான்?
மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் WFH நடைமுறை? IT நிறுவனங்களின் திட்டம் இதுதான்?

சமீப காலமாக நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று குறைந்து வருவதால் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான WFH நடைமுறையை முடித்து மீண்டும் அலுவலகம் வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WFH நடைமுறை

கொரோனா பேரலைத்தொற்று ஏற்படுத்திய தாக்கத்திற்கு மத்தியில் இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகள் தங்களது அலுவலகங்களை மூடி, ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதி அளித்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் பல்வேறு அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளது. ஆனால் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களை பொருத்தளவு, ஊழியர்கள் ஹைபிரிட் முறையில் வேலை செய்து வருகின்றனர்.

மீண்டும் ஊரடங்கு அமல் – இந்தியாவில் பாதிக்கப்படும் துறைகள் என்னனென்ன? ஒரு அலசல்!

பல நிறுவனங்கள், இன்னும் வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறையை பின்பற்றி வருகிறது. வெளிநாடுகளை பொறுத்தவரை ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது இந்தியாவில் உள்ள முன்னணி IT நிறுவன ஊழியர்களும் இனி அலுவலகத்துக்கு வந்து வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுவரை TCS, HCL, இன்போசிஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைப்ரிட் வேலை முறையை பின்பற்றுவதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து TCS நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், அலுவலகங்களில் ஹைப்ரிட் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்தோ, அல்லது வீடுகளில் இருந்தோ பணியாற்றலாம். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும். இப்போது நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்து பணியை மேற்கொள்கின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – முக்கிய கோரிக்கை!

இந்த ஹைப்ரிட் அல்லது 25 x 25 என்ற திட்டத்தின் கீழ், IT ஊழியர்களில் 25 சதவிகிதம் பேர் வீட்டில் இருந்தும், மீதி 25% பேர் அலுவலகத்தில் இருந்தும் வேலை செய்யலாம். இந்த முறையை தான் HCL நிறுவனம் பின்பற்றுகிறது. அதுவே இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை படிப்படியாக அலுவலகத்திற்கு வரவழைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஒரு ஊழியர் வாரத்துக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு அலுவலகம் செல்ல வேண்டியதாக இருக்கும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 50% ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்வார்கள். இதனை கவனத்தில் கொள்ளும் போது எப்படி இருந்தாலும் IT நிறுவன ஊழியர்கள் சீக்கிரமாக, அதுவும் இந்த மாதத்தில் இருந்தே WFH நடைமுறையை முடித்து மீண்டும் அலுவலகம் திரும்ப அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!