IPL 2021 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி உள்ள நட்சத்திர வெளிநாட்டு வீரர்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு பதிலாக எவின் லூயிஸ் மற்றும் ஓஷேன் தாமஸ் என இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடர்:
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் கொரோனா பறாளால் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சியுள்ள போட்டிகள் நடைபெறும் என BCCI அறிவித்தது. இதற்காக துபாய் புறப்பட்டு சென்ற அணிகள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் விலகி உள்ளனர். இதனால் அணிகள் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அந்த வகையில் ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரரான எவின் லூயிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழகத்தின் 24 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
103 சிக்ஸர்கள் உட்பட 1318 ரன்களுடன் மேற்கிந்திய தீவுகளின் லூயிஸ் 5-வது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெயில் (121) டி 20 கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்த சாதனையை லூயிஸ் விரைவில் முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸுடன் லூயிஸ் களமிறங்குவது முதல் முறையாகும் மற்றும் ஐபிஎல்லில் இரண்டாவது முறையாக பங்கேற்கிறார். ஏற்கனவே 2018 மற்றும் 2019 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தாமஸைப் பொறுத்தவரை ஐபிஎல்லில் ராயல்ஸுடன் இரண்டாவது முறையாக இணைகிறார்.
TN Job “FB Group” Join Now
அவர் 2019 இல் இந்த அணிக்காக நான்கு போட்டிகளில் விளையாடி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இல்லாததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று இங்கிலாந்து நட்சத்திரங்கள் இல்லாமல் ஐபிஎல் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட வேண்டிய நிலையில் உள்ளது. பட்லர் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பு காரணமாக விலகியுள்ளார். ஸ்டோக்ஸ் மனநல காரணங்களுக்காக கிரிக்கெட்டில் இருந்து விலகி உள்ளார். ஆர்ச்சர் முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஓய்வில் உள்ளார். புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், செப்டம்பர் 21 அன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முதல் போட்டியை விளையாட உள்ளது.