தமிழகத்தின் 24 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சென்னையில் உள்ள வானகரம், நல்லூர், பரனூர் உள்பட 24 இடங்களில் செயல்பட்டு வரும் சுங்கச் சாவடிகளில் நேற்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்களை ஒட்டி செல்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கட்டண உயர்வு
அரசின் சாலை போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். முன்னதாக ஒரு மாவட்டம் விட்டு மற்றொரு மாவட்டம் செல்வதற்கு இடையில் ஒரு சுங்கச் சாவடி இருந்து வந்த நிலையில் தற்போது அவை இரட்டிப்பு அடைந்துள்ளது. இதனுடன் நாளுக்கு நாள் பெட்ரோல் விலையும் ஏறிக்கொண்டிருக்கும் சமயத்தில் சுங்கச் சாவடிகளில் உயர்த்தப்படும் கட்டண உயர்வால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் & கல்லூரிகள் இன்று திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்காக சுமார் 62 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை பராமரிப்பில் செய்த முதலீடுகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் வரையில் கட்டண வசூல் செய்யப்பட வேண்டும். பின்னர் சாலை பராமரிப்புக்காக 40% கட்டணம் வசூல் செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு கூடுதலாக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் இன்றும் கூட அதிகளவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் தகவல்!
தவிர ஆண்டு தோறும் 8 முதல் 10% வரை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு வருவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகள் நள்ளிரவு முதல் கட்டண உயர்வை சந்தித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள வானகரம், நல்லூர், பரனூர், சூரப்பட்டு உள்ளிட்ட 24 சுங்கச் சாவடிகளில் நேற்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் கீழ் ரூ.5 முதல் ரூ.15 வரை ஏற்பட்ட கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள் தங்களது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.