பயணங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக அரசு எடுத்துள்ள அசத்தல் முயற்சி – மேற்கு வங்க முதல்வர் தொடக்கம்!
வாகனங்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கு வங்க முதல்வர் வாகன இருப்பிட கட்டுப்பாட்டு மையம் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
வாகன கட்டுப்பாட்டு மையம்:
வாடகை வாகனங்கள் மூலம் பயணத்தை மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி விட்டது. வாகன ஓட்டிகள் அல்லது மற்றவர்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி உள்ளார். நேற்று, வாகன இருப்பிட கட்டுப்பாடு மையம் மற்றும் அதற்கான செயலியை தொடங்கி வைத்துள்ளார்.
உஷாரா இருங்க… அதிகரிக்கும் பறவை காய்ச்சல் – நோய்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!
Follow our Instagram for more Latest Updates
இந்த கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அனைத்து வாகனங்களின் இயக்கம், வேகம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படும். நகரும் வாகனங்களில் பயணிக்கும் பெண்களுக்கு ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அவற்றை, காரில் உள்ள அலர்ட் பட்டன் மூலம் காவல் துறைக்கு தெரிவிக்க முடியும். இந்த அலர்ட் பட்டன் அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.