உஷாரா இருங்க… அதிகரிக்கும் பறவை காய்ச்சல் – நோய்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!
கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் அதிகரித்து கொண்டு வருவதால் தமிழகத்தில் பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அடுத்தப்படியாக அழூரில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பெருமாங்குழி பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால் சுமார் 2000 கோழிகள், வாத்துகளை அழிக்க கேரள அரசின் நோய் தடுப்பு துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், நாமக்கல்லில் இருந்து தினமும் கேரளாவிற்கு 1 கோடி முட்டைகள் மற்றும் ஏராளமான கோழிகள் அனுப்பப்பட்டு வருகிறது.
புதுச்சேரியிலும் உயர இருக்கும் மின் கட்டணம் – அவதியில் பொதுமக்கள்!!
அதனால் நாமக்கல் மாவட்டத்தில், பறவை காய்ச்சல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மாவட்டத்தில் இருக்கும் கோழி பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது போன்று பண்ணைகளுக்குள் வரும் வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து கோழி பண்ணை வாசலில் பொட்டாஷியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி தற்போது, தமிழகத்தில் பறவை காய்ச்சலை தடுப்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.