இன்று முதல் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு அமல் – அரசு அறிவிப்பு! எதற்கெல்லாம் அனுமதி?
டெல்லியில் கொரோனா வைரஸ் வழக்குகளின் புதிய பாதிப்பு காட்டுத்தீ போல் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைக்கு பின்னர் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.
ஊரடங்கு அமல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வழக்குகளால் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட்டு வரும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் நோய் தொற்றின் தீவிர தன்மையை பதிவு செய்து வரும் டெல்லியில் இன்று (ஜன.8) முதல் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் டெல்லியில் இன்று (ஜன.8) இரவு 10 மணி முதல் அடுத்த 55 மணி நேரத்திற்கு இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி!
அதாவது, தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அரசு தரப்பில் இருந்து தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் இன்று (ஜன.8) 20,000 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தலைநகரில் டெல்லியில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்து கடந்த சில நாட்களாக புதிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நேர்மறை விகிதம் 17 சதவீதத்திற்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது டெல்லி ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும் சில செயல்பாடுகள் என்னவென்பதை விரிவாக காணலாம்.
- ஊரடங்கு காலங்களில் மளிகை கடைகள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருக்கும்
பொது போக்குவரத்து செயல்படும் - மருத்துவமனைகள், நோயறிதல் மையங்கள், கிளினிக்குகள், மருந்தகங்களில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் அடையாள அட்டையுடன் பயணம் செய்யலாம்.
- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் நோயாளிகள் மருத்துவரின் மருந்துச் சீட்டைத் தந்தால், உதவியாளருடன் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – பெற்றோர்கள் கோரிக்கை!
- விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் இருந்து வருபவர்கள் டிக்கெட்டை வைத்துக்கொண்டு பயணிக்கலாம்.
- அனுமதி அட்டையுடன் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
- தேர்வு மைய பணிக்காக செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையுடன் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
- போலீஸ், சிவில் பாதுகாப்பு, சிறை, ஊர்க்காவல், தீயணைப்பு, அவசர சேவை போன்ற அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளில் பணிபுரிபவர்கள் பயணம் செய்ய அனுமதி உண்டு.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்