இனி ஜில்லுனு இருக்கலாம்… தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தான் – வானிலை மையம் தகவல்!

0
இனி ஜில்லுனு இருக்கலாம்... தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தான் - வானிலை மையம் தகவல்!
இனி ஜில்லுனு இருக்கலாம்... தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தான் - வானிலை மையம் தகவல்!
இனி ஜில்லுனு இருக்கலாம்… தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தான் – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் வெயில் தாக்கம் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிவிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 19ம் வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, வருகிற 20ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படுவதுடன், குறைந்தபட்சமாக 24-25 டிகிரி முதல் அதிகபட்சமாக 33-34 டிகிரி செல்சியஸ்‌ வரை வெப்பநிலை இருக்கக்கூடும்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் – இது தான் காரணம்!

இதையடுத்து அடுத்த சில நாட்களுக்கு மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!