இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் – இது தான் காரணம்!

0
இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் - இது தான் காரணம்!
இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் - இது தான் காரணம்!
இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் – இது தான் காரணம்!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து மரபணு நிபுணர் ஒருவர் கூறியவற்றை பற்றி பார்ப்போம்.

கொரோனா பரவல்

இந்திய நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவில் XBB 1.16 அல்லது XBB.1.5 வகையிலான கொரோனா வைரஸ் காரணமாக தற்போது கொரோனா பரவல் அதிகமாகி கொண்டு வருவதாக உயர் மரபணு நிபுணர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் தற்போது, XBB 1.16 வகை கொரோனா வைரஸால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் – பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!

இதில் குறிப்பாக உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரில் 14 பேரும், அமெரிக்காவில் 15 பேரும் XBB 1.16 வகை கொரோனா வைரசால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!