தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் தற்போது கனமழை ஏதும் இன்றி அனைத்து மாவட்டங்களிலும் மிதமான வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றைய நிலவரப்படி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால் அதிக அளவிலான பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டது. அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகதியில் உதவிகளை செய்து வந்தது. இருப்பினும், வீடுகளுக்குள்ளும், விளைநிலங்களிலும் மழை நீர் புகுந்து சேதங்களை உண்டாக்கியது. பயிர்களுக்கான இழப்பீடு குறித்து அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை ஏதுமின்றி சாதாரணமான வானிலை நிலவி வருகிறது. சென்னை வானிலை மையம் இன்றைய நிலவரத்தின் படி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
16.01.2022, 17.01.2022: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
18.01.2022: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
19.01.2022, 20.01.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை,
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 32 குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
பிலவாக்கல் (விருதுநகர்) 5, தென்காசி (தென்காசி) 4, பள்ளிப்பட்டு (திருவள்ளுர்), செங்கோட்டை (தென்காசி ) தலா 3, ஆரணி (திருவண்ணாமலை, திருச்செந்தூர் (தூத்துக்குடி) தலா 2, ஸ்ரீவில்லிபுத்தார் (விருதுநகர் ) 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.