தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பொதுப்பணித்துறையில் இன்ஜினீயரிங் அப்பரண்டிஸ் மற்றும் டிப்ளமோ அப்பரண்ட்டிஸ் பதவிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை வேலை:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அவ்வாறு தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுப்பணித்துறையில் இன்ஜினீயரிங் அப்பரண்டிஸ் மற்றும் டிப்ளமோ அப்பரண்ட்டிஸ் பதவிகளில் ஏற்பட்டுள்ள 500 காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜுவின் முதல் பதிவு – உற்சாகத்தில் ரசிகர்கள்!
இந்த பணியிடங்களுக்கு சிவில், எலெட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ மற்றும் இன்ஜினீயரிங் முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதாவது இன்ஜினீயரிங் அப்பரண்டிஸ் பதவிகளில் சிவில் பிரிவில் 306 காலியிடங்களும், எலெட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 34 காலியிடங்களும் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் டிப்ளமோ அப்பரண்ட்டிஸ் பதவிகளில் சிவில் பிரிவில் 144 காலியிடங்களும், எலெட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 16 காலியிடங்களும் உள்ளன.
சன் டிவி “ரோஜா” சீரியலில் இருந்து விலகும் ஹீரோயின் பிரியங்கா – ரசிகர்கள் ஷாக்!
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் டிப்ளமோ மற்றும் பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் இன்ஜினீயரிங் அப்பரண்டிஸ்களுக்கு ரூ.9,000 மற்றும் டிப்ளமோ அப்பரண்ட்டிஸ்களுக்கு ரூ.8,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த குறிப்பிட்ட பணியிடங்களுக்கு டிப்ளமோ மற்றும் இன்ஜினீயரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.