தமிழகத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
சென்னையில் குடிநீர் பராமரிப்பு பணி நடைபெற்று கொண்டிருப்பதால் ஒருசில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.
குடிநீர் விநியோகம்
தமிழகத்தில் அவ்வப்போது குடிநீர் வாரியத்தின் மூலமாக குடிநீர் தொட்டி பராமரிப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக ராமாபுரம் விரிவான குடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்புப் பணி செய்யப்பட்டு வருகிறது. இதனால், சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, மார்ச் 18 ஆம் தேதி முதல் மார்ச் 19-ஆம் தேதி காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணாநகர். தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் போன்ற பகுதிகளில் குடிநீர் தொட்டி பராமரிப்பு காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளும் படியும், குறைந்த அளவிலான நீரை பயன்படுத்தும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் – முதல்வருடன் நிதியமைச்சர் ஆலோசனை!
மேலும், தேவையான குடிநீரை பொதுமக்கள் லாரிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொது மக்கள் குடிநீர் வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் பதிவு செய்து தேவையான குடிநீரை பெற்றுக்கொள்ளலாம் எனவும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக எவ்வித தடையுமின்றி சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.