தமிழக அரசின் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் – முதல்வருடன் நிதியமைச்சர் ஆலோசனை!
தமிழ்நாடு 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வருகிற மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், தலைமை செயலகத்தில் முதல்வருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்
பட்ஜெட் ஆலோசனை
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த ஆலோசனையில் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கின்றனர். அதன் படி இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்கான உரிமைத் தொகை குறித்து கட்டாயம் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், இளைஞர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.