தமிழக கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை – காரணம் இது தான்!
தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ஜாதியை குறிக்கும் வண்ணக் கயிறுகளை விற்பது தொடர்பாக பேன்சி ஸ்டோர் உரிமையாளர்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
போலீசார் எச்சரிக்கை
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பலரும் சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை கட்டி பள்ளிக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கடைகளில் சாதியை குறிக்கும் வண்ணக் கயிறுகள் சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, மாணவர்கள் அணிந்து வரும் இது போன்ற வண்ணக் கயிறுகளால் அவர்களுக்கிடையே இன பாகுபாடு, மதம் தொடர்பான பாகுபாடு ஏற்படுவது உண்டு. இதனால், மாணவர்கள் சாதிகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை கட்டுவதற்கும், வளையங்கள் போடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இருப்பினும் குறிப்பிட்ட சில இடங்களில் மாணவர்கள் இது போன்ற வண்ணக் கயிறுகளை கட்டி வருவது கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ஜாதியை குறிக்கும் வண்ணக் கயிறுகளை மாணவர்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இதை கவனித்த மாவட்ட காவல்துறையினர் ஜாதியை குறிக்கும் வண்ணக் கயிறுகளை விற்பது தொடர்பாக பேன்சி ஸ்டோர் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய ரயில் சேவையில் புதிய மாற்றங்கள் – தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
அந்த வகையில் ஜாதியை குறிக்கும் வண்ணக் கயிறுகளை இனி விற்பனை செய்யக்கூடாது என்றும் அதை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், கல்வி நிறுவனங்களில் சாதிகள் இல்லை என்று பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் பாகுபாடு, பிரிவினைகளை உருவாக்குவதாக கருதப்படுவதால் ஜாதியை குறிக்கும் வண்ணக் கயிறுகளை அணிவது முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.