TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு!

0
TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - எச்சரிக்கை அறிவிப்பு!
TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு - எச்சரிக்கை அறிவிப்பு!
TNPSC தேர்விற்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இடைத்தரகர்கள், விண்ணப்ப பதிவு குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வுகள்:

தமிழகத்தில் உள்ள அரசுத்துறை காலிப்பணியிடங்கள் TNPSC ஆணையத்தால் நிரப்பப்படுகிறது. மேலும் ஏற்கனவே பணியில் உள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவதற்காகவும் துறைத்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த குரூப் 4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் இனிவரும் தேர்வுகளில் தவறுகள் ஏற்படாத வண்ணம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. TNPSC தலைமை பொறுப்புகளில் இருந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு அறிவிப்புகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு போட்டிகள் – ரூ.22 லட்சம் ஓதுக்கீடு!

அந்த வகையில் நேற்று 3 வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் தேர்வர்களை எச்சரிக்கும் வகையில் பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அவை,

  • தேர்வானையத்தின் தெரிவுகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரரின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
  • பொய்யான வாக்குறுதிகள்‌ சொல்லி, தவறான வழியில்‌ வேலை வாங்கித்‌ தருவதாகக்‌ கூறும்‌ இடைத்தரகர்களிடம்‌ விண்ணப்பதாரர்‌ மிகவும்‌ கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
  • இதுபோன்ற தவறான மற்றும்‌ நேர்மையற்றவர்களால்‌ விண்ணப்பதாரருக்கு ஏற்படும்‌ எவ்வித இழப்புக்கும்‌ தேர்வாணையம்‌ எந்த விதத்திலும்‌ பொறுப்பாகாது.

TN Job “FB  Group” Join Now

  • இணையவழி விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்படும்‌ அனைத்து தகவல்களுக்கும்‌ வின்ணப்பதாரரே முழுப்‌ பொறுப்பாவார்‌.
  • விண்ணப்பதாரர்‌, தேர்விற்கு இணையவழியில்‌ வின்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும்‌ தவறு ஏற்படின், தாங்கள் விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ பொதுச்சேவை மையங்களையோ குற்றம்‌ சாட்டக்‌கூடாது.
  • விண்ணப்பதாரர்‌ பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும்‌ முன்னர்‌, நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!