தமிழகத்தில் கரையோர மக்களுக்கான எச்சரிக்கை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பழனியில் பெய்த கனமழை காரணமாக சண்முகா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் வரும் சிம் கார்டு மோசடிகள் – தடுக்கும் வழிமுறைகள் வெளியீடு!
இதனை தொடர்ந்து தொடர் மழையின் காரணமாக அணைகளில் நீர் நிரம்பி வருவதால் உபரி நீர் திறக்கப்பட்டு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோரமாக இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பழனியில் பெய்து வந்த கனமழை காரணமாக சண்முக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கொடைக்கானல் சாலையில் உள்ள வரதமாநதி நீர்த்தேக்கத்திற்கு சுமார் 2,500 கன அடி தண்ணீரை எட்டியுள்ளது.
இதன் காரணமாக உபரி நீர் அனைத்தும் சண்முகா நதி வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து பழனியில் உள்ள மற்றொரு அணையான பாலாறு- பொருந்தலாறு அணை பகுதிகளிலும் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் பாலாறு- பொருந்தலாறு அணைக்கு நீர்வரத்து சுமார் 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 6,000 கன அடி தண்ணீரானது சண்முக நதியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சண்முகா நதியில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்