தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைகளுக்கான “வார் ரூம்” – சிறப்பு அதிகாரிகள் நியமனம்!!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டளை மையம் எனப்படும் வார் ரூம் அமைக்கப்பட்டு அதில் பணிபுரிய 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வார் ரூம்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. பலர் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ள போதிலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் பலர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் – எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு!!
இதனால் அரசு தரப்பில் சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வார் ரூம் எனப்படும் ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டளை மையத்திற்கு ஒருங்கிணைப்பாளராக தாரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். ஆக்ஸிஜன் இருப்பு, தேவையை கண்காணிக்க டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமாரும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகளை தெரிந்து கொள்ளவும் பல அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மையம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள ‘104’ சுகாதார சேவை மையத்துடன் இணைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைப்பது, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை குறித்து தெரிந்து கொள்ள சிறப்பு மையமாக செயல்படுகிறது.
மேலும் இந்த மையம் மூலமாக 24 மணி நேரமும் செயல்பட்டு மருத்துவ படுக்கை வசதி குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றியும் நிலைமை அறிந்து தேவைப்படுவோருக்கு உதவி வழங்க வசதியாக இருந்தது. மேலும் ஆக்சிஜன் தேவை உள்ளவர்கள் 104 என்ற தொலைபேசி எண்ணிலோ, ட்விட்டரிலோ தொடர்பு கொள்ளலாம்.மேலும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அல்லது இந்த மையத்தை தொடர்பு கொள்பவர்கள் தேவைகளை அதிகாரிகள் தொடர்பு கொண்டு தீர்வு வழங்குவார்கள்.