தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் – எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு!!
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர்:
தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையும் நிலையில், புதிய சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2ஆம் தேதி நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக 156 இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து மே 7ஆம் தேதி அன்று தமிழக முதல்வராக திமுக தலைவர், முக ஸ்டாலின் பதவியேற்றார். தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆட்சியமைக்கும் கட்சிக்கு எதிர்க்கட்சியாக அதிமுக தேர்தெடுக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே குழப்பங்கள் நீடித்து வந்தது.
தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சையாண்டி தேர்வு – ஆளுநர் வாழ்த்து!!
தற்போது அதிமுக கட்சியினர் ஒருமித்த மனதுடன், எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். இது குறித்த தகவல் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. முன்னதாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் பழனிச்சாமி 93,802 வாக்குகளுடன் அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.