PM கிசான் திட்டத்தின் 12வது நிதிப்பணத்தை பெற வேண்டுமா? இதை செய்யுங்கள்!

0
PM கிசான் திட்டத்தின் 12வது நிதிப்பணத்தை பெற வேண்டுமா? இதை செய்யுங்கள்!
PM கிசான் திட்டத்தின் 12வது நிதிப்பணத்தை பெற வேண்டுமா? இதை செய்யுங்கள்!
PM கிசான் திட்டத்தின் 12வது நிதிப்பணத்தை பெற வேண்டுமா? இதை செய்யுங்கள்!

இன்னும் ஒரு சில மாதங்களில் அறிவிக்கப்பட இருக்கும் PM கிசான் திட்டத்தின் 12வது தவணைக்கான பணத்தை பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களில் இருக்கும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிசான் நிதியுதவி

மத்திய அரசின் PM கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தவணைக்கும் ரூ.2000 என்ற அடிப்படையில் இதுவரை 11 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நிதிப்பணம் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் PM கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் 12வது தவணைப்பணம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதற்கிடையில் கிசான் திட்டத்தின் 11வது தவணைப்பணத்தை சிலர் பெறவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர். அதாவது, கிசான் திட்டத்திற்கு பதிவு செய்யும் போது ஏற்படும் சில விண்ணப்ப பிழைகள் காரணமாக ரூ.2000 நிதிப்பணம் விவசாயிகளுக்கு அனுப்பப்படவில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த விண்ணப்பங்களில் பெயர்கள், முகவரி ஆகியவை தவறாக இருப்பது, ஆதார் அட்டையுடன் விவரங்கள் பொருந்தாமலும் இருப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நிதிப்பணம் கிடைக்காமல் இருக்கும்.

Exams Daily Mobile App Download

இதனால், படிவத்தை பூர்த்தி செய்யும் போது பெயரை ஆங்கிலத்தில் எழுதுவது இது போன்ற சிக்கல்களை தவிர்க்கும். அதே போல விண்ணப்பத்தில் உள்ள பெயரும், வங்கிக் கணக்கில் உள்ள விண்ணப்பதாரரின் பெயரும் வெவ்வேறாக இருந்தால் பணம் நிறுத்தப்பட்டிருக்கலாம். அதனால் IFSC குறியீடு, வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கியின் பெயர் ஆகியவற்றை எழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே PM கிசான் திட்டத்தின் 12வது தவணைப்பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இப்போது விண்ணப்பங்களில் இது போன்ற தவறுகள் இருந்தால் அதை சரிசெய்ய,

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை ரெடி – ரூ.50,400/- சம்பளம் || விரைவில் விண்ணப்பியுங்கள்!

  • முதலில் pmkisan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் ‘ஃபார்மர்ஸ் கார்னர்’ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • இங்கே ‘ஆதார் திருத்து’ என்ற விருப்பம் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதில் உங்கள் ஆதார் எண்ணில் திருத்தங்களை செய்யலாம்.
  • மேலும், வங்கிக் கணக்கு எண்ணில் தவறு இருந்தால், அதை சரிசெய்ய வேளாண் துறை அலுவலகம் அல்லது கணக்காளரை தொடர்பு கொள்ள வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!