நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான ஆயத்த பணிக்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் தேவையான தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. வாக்கு சாவடி ஊழியர்களுக்கான பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று இறுதி கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆதார் நிறுவனத்தில் மாதம் ரூ.1,12,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தற்போது தமிழக தேர்தல் ஆணையம் ஆனது தமிழ்நாட்டில் உள்ள 68,000 வாக்கு பதிவு மையங்களில் 8000 வாக்கு பதிவு மையங்கள் பதற்றமானவை என்று தெரிவித்துள்ளது. மேலும் ஒரு லட்சத்து 59 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.