தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? தேமுதிக தலைவர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளில் பொதுமக்கள் அலட்சியம் காட்டினால் மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் விளைவாக தற்போது கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தொற்று அடிப்படையில் தமிழகத்தில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மாநில மக்களுக்கு இது குறித்து எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜூலை மாதம் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை – முழு விபரம் இதோ!
இதனால் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் போன்ற பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் கொரோனா மூன்றாவது அலை, டெல்டா பிளஸ் வகை கொரோனா, கருப்பு பூஞ்சை நோய் போன்றவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதை தடுத்து மக்களுக்கு முறையாக தடுப்பூசி வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இதற்காக மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் அலட்சியம் காட்டினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் சேதம் ஏற்படுத்துவதுடன் மீண்டும் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொழில் முடக்கம் ஏற்பட்டு மக்கள் அனைவரும் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் மாநில மக்களை எச்சரித்துள்ளார்.