ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய் டிவி ப்ரியங்கா – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
தொகுப்பாளராக எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் பிரியங்கா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கையில் ரசிகர்கள் மாடர்ன் உடையில் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய் டிவி ப்ரியங்கா:
விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனக்கென்று மில்லியன் கணக்கில் ரசிகர் கூட்டங்களை சம்பாரித்து வைத்திருப்பவர் தான் விஜே பிரியங்கா. அவர் ஒல்லி பெல்லி என்கிற நிகழ்ச்சியின் மூலமாக தான் சினிமா துறையில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். தனது பேச்சு திறமையாலும், காமெடி தன்மையாலும் மட்டுமே இப்படி ஒரு ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்திருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதாவது சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், சூரிய வணக்கம், ஜோடி நம்பர் ஒன், கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் மற்றும் பல நிகழ்ச்சிகளை பிரியங்கா தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு ப்ரியங்காவிற்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிற நிகழ்ச்சிகளில் அனைவரையும் சிரிக்க வைத்தது போலவே பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களையும் சிரிக்க வைத்து கொண்டிருந்தார். பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதிலேயே ப்ரியங்காவிற்கு மட்டுமே எதிர்மறை விமர்சனங்கள் எதுவும் வரவில்லை.
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசையும் தட்டி சென்றார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். தற்போது நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாலும் கூட அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களிலும் நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது பிரியங்கா மாடர்ன் உடையில் இருக்கும் படியான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு எக்கச்சக்கமான லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி குவித்து கொண்டிருக்கிறார்.