புது வீட்டிற்கு இடம் பார்க்க செல்லும் குடும்பத்தினர், நண்பர்களுடன் சாப்பிட வந்த கண்ணன் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் ஐஸ்வர்யா மீனா ஜீவாவுடன் இணைந்து புது வீடு கட்ட இடம் பார்க்க செல்கின்றனர். மறுபக்கம் கதிர் ஹோட்டலிற்கு கண்ணனும் அவருடைய நண்பர்களும் சாப்பிட செல்ல பார்வதி அதை பார்த்து கோபப்படுகிறார்
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா பார்லருக்கு முடி வெட்ட ஒரு பெண் வர அவர் ஐஸ்வர்யா கேட்ட பணத்தை கொடுக்காமல் இருக்கிறார். உடனே தனம் அரை மணி நேரம் வேலை செய்துவிட்டு அவர்களின் ஒரு நாள் சம்பளத்தை கேட்டால் எப்படி கொடுப்பார்கள் ஊருக்கு தகுந்தாற் போல காசு வாங்க வேண்டும் என தனம் சொல்கிறார். பின் ஐஸ்வர்யா வெட்டிய முடிகளை கூட்ட மீனாவின் இந்த இடம் நன்றாக இருப்பதாக நினைத்தோம் ஆனால் முடி நிறைய கிடக்கிறது என சொல்கிறார். உடனே மீனா ஆமாம் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இப்படி முடி கிடந்தால் என்ன ஆகும் என கேட்க, தனம் நீ தான் கஸ்டமரை அழைத்து வந்தாய் என சொல்கிறார். அது தங்கை தொழில், இது கொழுந்தன் மனைவி என ஐஸ்வர்யா சொல்லி சிரிக்கிறார்
அப்போது ஜீவா வந்து புது இடம் வாங்குவது பற்றி பார்க்க போகலாம் என சொல்ல தனம் மீனா ஐஸ்வர்யா கிளம்புகின்றனர். தனம் கதிர் இல்லாமல் போவது சரியாக வாராது என சொல்ல, உடனே ஐஸ்வர்யா கண்ணனும் இல்லை அதனால் என்ன என சொல்கிறார். ஆமாம் அண்ணி என ஜீவா சொல்ல, தனம் சரி என கிளம்புகிறார். பின் அனைவரும் இடம் பார்க்க கிளம்புகின்றனர். அப்போது ஒரு இடத்தை புரோக்கர் காட்டுகிறார். அந்த இடம் தூரமாக இருப்பதால் அனைவருக்கும் பிடிக்கவில்லை. ஐஸ்வர்யாவும் இந்த இடத்தில் பார்லர் வைத்தால் சரியாக வராது என சொல்கின்றனர்.
பின் ப்ரோக்கர் இன்னொரு இடத்தை காட்டுகிறார். அந்த இடம் கடைக்கு அருகே இருக்கிறது. மேலும் அருகே பள்ளிகளும் இருக்கின்றன. அதனால் மீனா எனக்கு பிடித்துள்ளதாக சொல்ல ஐஸ்வர்யாவிற்கு பிடிக்கிறது. பின் தனம் எல்லாருக்கும் பிடித்து இருந்தால் சரி தான் என சொல்ல ஆனால் அந்த இடத்தின் விலை அதிகமாக இருக்கிறது. ஜீவா இவ்வளவு விலை கொடுக்க முடியாது என சொல்ல, உடனே ப்ரோக்கர் வேறு ஒரு இடத்தை காட்டுகிறார். அந்த இடம் எல்லாருக்கும் பிடித்துவிடுகிறது. ஜீவாவும் இதை முடிக்கலாம் என சொல்கிறார். மறுபக்கம் கதிர் கடையில் புரோட்டாவிற்கு மாவு செய்து கொண்டிருக்கிறார்.
தமிழகத்தில் இன்று (செப்.08) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
பின் கண்ணன் கடைக்கு வர சாப்பாடு என்ன இருக்கிறது என கேட்கிறார். அசைவம் இருப்பதாக சொல்ல, கண்ணன் அவருடைய நண்பர்களை வர சொல்கிறார். பின் அனைவரும் பிடித்தது எல்லாம் சாப்பிட சொல்கிறார். கண்ணன் தனது நண்பர்களுக்கு தேவையானது எல்லாம் சொல்ல, அனைவரும் சாப்பிடுகின்றனர். கண்ணன் நண்பர்கள் எல்லாரும் சாப்பிட்டு முடித்துவிட பணம் கொடுக்காமல் செல்கின்றனர். பார்வதி அதை பார்த்து முல்லையிடம் ஓசியில் சாப்பிட்டால் என்ன ஆகும் என கேட்க, முல்லை சும்மா இரு என சொல்கிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்