கதிரை பத்திர அலுவலகத்திற்கு போக விடாமல் தடுக்கும் பார்வதி, மீனா அப்பா வைத்த ட்விஸ்ட் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கதிரை பத்திர அலுவலகத்திற்கு போக விடாமல் தடுக்கும் பார்வதி, மீனா அப்பா வைத்த ட்விஸ்ட் - இன்றைய
கதிரை பத்திர அலுவலகத்திற்கு போக விடாமல் தடுக்கும் பார்வதி, மீனா அப்பா வைத்த ட்விஸ்ட் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கதிரை பத்திர அலுவலகத்திற்கு போக விடாமல் தடுக்கும் பார்வதி, மீனா அப்பா வைத்த ட்விஸ்ட் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை அம்மா பார்வதி கதிரை பத்திரம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என சொல்கிறார். ஆனால் கதிர் முல்லை கேட்காமல் கிளம்பி செல்கின்றனர். மறுபக்கம் மூர்த்தி குடும்பத்துடன் வர அங்கே மீனாவின் அப்பா பெரிய ட்விஸ்ட் ஒன்றை வைக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் பத்திர அலுவலகத்திற்கு செல்ல அப்போது முல்லை அம்மா தடுத்து நிறுத்துகிறார். எல்லாருக்கும் சொத்தில் பங்கு இருக்கிறது. ஆனால் எல்லாரும் சேர்ந்து ஜீவா பெயரில் இந்த வீட்டை எதற்காக எழுதி கொடுக்க வேண்டும் என கேட்க கதிர் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். முல்லையின் அப்பா மூர்த்தி மாப்பிள்ளை ஒரு கண்ணில் வெண்ணெய் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைக்கும் ஆள் இல்லை என சொல்ல, கதிர் முல்லை அம்மா பேசுவதை கேட்காமல் கிளம்பி செல்கிறார். மறுபக்கம் முல்லை நானும் வருகிறேன் என சொல்ல சரி என கதிர் சொல்கிறார்.

மூர்த்தி குடும்பத்துடன் பத்திர அலுவலகத்திற்கு வர மீனாவின் அப்பா இன்னும் வராமல் இருக்கிறார். பின் பாண்டியன் கயலுக்கு சாப்பாடு ஊட்ட மீனாவின் அப்பா வருகிறார். பின் தனத்திடம் கண்ணன் வீட்டை 75 லட்சத்திற்கு தான் விற்கிறோம் ஆனால் 10 லட்சம் தான் கொடுத்திருக்கிறார். மீதமுள்ள பணத்தை எப்போது கொடுப்பார் என கேட்கிறார். இன்னைக்கு எதுவும் கொண்டு வந்தது போல இல்லையே என கேட்க 65 லட்சத்தை கையில் வைத்து கொண்டா இருப்பார்கள் என தனம் சொல்கிறார். அதெல்லாம் கொடுத்துவிடுவார் என தனம் சொல்கிறார்.

பின் கதிரும் முல்லையும் வர அனைவரும் அவர்களிடம் எதுவும் பேசாமல் இருக்கின்றனர். அனைவரும் உள்ளே செல்ல பத்திர பதிவிற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அப்போது முல்லை கயலை கொஞ்ச அது பிடிக்காமல் மீனாவின் அப்பா கயலை தூக்கி கொண்டு செல்கிறார். பின் மூர்த்தி, ஜீவா, கண்ணன் கையெழுத்து போட கதிரும் கையெழுத்து போடுகிறார். அதன் பின் சாட்சிக்கு ஆள் கேட்க மீனாவின் அப்பா மீனாவை உள்ளே அழைத்து சென்று புகைப்படம் எல்லாம் கேட்கிறார். அங்கே என்ன நடக்கிறது என தனத்திற்கு புரியாமல் இருக்கிறது.

இனியாவிடம் மறைமுகமாக திருமணம் பற்றி சொன்ன கோபி, கோவப்பட்ட ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் இடத்தை விற்பவர்கள் சாட்சிக்கு ஆள் வந்திருக்கிறார்களா என கேட்க, தனமும் முல்லையும் வருகின்றனர். அப்போது வீட்டை வாங்குபவர் கையெழுத்து போடுங்கள் என சொல்ல மீனாவின் அப்பா மீனாவை கையெழுத்து போட சொல்கிறார். அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர், மீனாவிற்கே என்ன நடக்கிறது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!