தனம் கர்ப்பம் பற்றி சொல்ல முடியாமல் தவிக்கும் மூர்த்தி, கடுப்பான குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தனம் கர்ப்பம் பற்றி சொல்ல முடியாமல் தவிக்கும் மூர்த்தி, கடுப்பான குடும்பத்தினர் - இன்றைய
தனம் கர்ப்பம் பற்றி சொல்ல முடியாமல் தவிக்கும் மூர்த்தி, கடுப்பான குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தனம் கர்ப்பம் பற்றி சொல்ல முடியாமல் தவிக்கும் மூர்த்தி, கடுப்பான குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் கதிரும் தனது மனைவிகளை கவனிக்க எல்லாரும் தனம் எல்லா வேலையும் செய்வார் என பேசிக் கொள்கின்றனர். அப்போது மூர்த்தி எல்லாரும் அவங்க பொண்டாடி வேலை செய்ய கூடாது என சொல்கிறார்கள் என தனத்திடம் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் ஐஸ்வார்யாவிற்கு மாத்திரை எடுத்து கொடுத்து, நீ ஒரு வேலையும் செய்யாதே என சொல்கிறார். உனக்கு எதாவது தேவை இருந்தால் அண்ணியிடம் சொல்லு அவங்க செய்வாங்க நீ ஒழுங்கா குழந்தையை பெற்று கொடுத்தால் போதும் என கண்ணன் சொல்கிறார். மூர்த்தி அதை பார்த்துவிட்டு செல்கிறார். மறுபக்கம் கதிர் முல்லையை ஒரு வேலையும் செய்யாதே என சொல்கிறார். எனக்கு வேலை செய்யும் இடம் எல்லாம் உன் நியாபகம் தான் என கதிர் சொல்ல, முல்லை நீங்க கவலைப்படாதீங்க அக்கா என்னை ஒரு வேலையும் செய்ய விடாமல் நன்றாக பார்த்துக் கொள்வதாக சொல்கிறார்.

கோபியிடம் வீட்டை கேட்க ராதிகா வீட்டிற்கு சென்ற ஈஸ்வரி, கோபி எடுத்த அதிரடி முடிவு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதையும் மூர்த்தி பார்த்துவிட, தனத்திடம் வந்து எல்லாரும் அவங்க மனைவிகளை வேலை செய்யவிடாமல் இருக்க சொல்கிறார்கள். அதனால் நீயும் வேலை செய்யாதே என சொல்ல, அதற்கு முதலில் எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என சொல்கிறார். அதெல்லாம் சொல்லிவிடலாம் என மூர்த்தி சொல்ல, பின் நீ தான் எல்லாரிடமும் நன்றாக பேசுவாய் நீயே சொல்லிவிடு என சொல்கிறார். ஆனால் தனம் முடியாது என சொல்கிறார். பின் தனம் சமைக்கும் போது தாளிக்க முல்லைக்கு வாந்தி வருகிறது. அப்போது தனத்திற்கும் வாந்தி வர, மீனா அதை பார்த்துவிடுகிறார்.

தனம் தாளிக்கும் வாடை பிடிக்காமல் செல்ல, மீனா சந்தேகத்துடன் பார்க்கிறார். முல்லையிடம் மீனா அக்காவிற்கு எதோ ஆகிவிட்டது என சொல்ல, முல்லை அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். பின் தனத்திடம் ஒன்றுமில்லையே என கேட்க தனம் அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். பின் தனம் எனக்கு தலைவலி என சொல்லி சமாளிக்கிறார். மறுபக்கம் மூர்த்தி எல்லாரையும் அமர வைத்து விஷயத்தை சொல்ல நினைக்கிறார். ஆனால் சொல்ல முடியாமல் தவிக்க பொறுமையாக இருக்க முடியாமல் கண்ணன் கிளம்பி செல்கிறார்.

ஆனால் ஜீவா உக்கார சொல்ல, மூர்த்தி சொல்ல ஆரம்பிக்கிறார். மூர்த்தி எப்படி சொல்வது என தெரியாமல் இருக்க, சம்மந்தம் இல்லாத கதையை சொல்கிறார். எல்லாரும் என்ன செய்வது என தெரியாமல் இருக்க, மூர்த்தி எல்லாரும் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என சொல்ல, கடைசியில் எல்லாரும் கேட்க முடியாமல் கிளம்புகின்றனர். கடைசி வரை மூர்த்தி சொல்லாமல் இருக்க தனம் கோவித்து கொள்கிறார். பின் கஸ்தூரியும் தனத்தின் அம்மாவும் தனத்தை பார்க்க வருகின்றனர். கஸ்தூரி சந்தோஷமாக இருப்பதாக சொல்ல, தனம் மாட்டிக் கொண்டது போல முழிக்கிறார். தனம் அம்மா தனம் உடம்பு பற்றி கேட்க, தனம் பேச விடாமல் தடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!