Vijay TV Bigg Boss 5 Promo | ராஜு & ப்ரியங்காவுக்கு இடையே தடித்த வாக்குவாதம் – அடுத்த கலவரம்?
விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில், இன்று நடத்தப்பட்ட டாஸ்கில் போட்டியாளர்கள் ராஜு மற்றும் ப்ரியங்காவுக்கு இடையே சில வார்த்தை போர் நடைபெற்றிருப்பதை போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் ப்ரோமோ
வழக்கமாக ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் ஒவ்வொரு வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் இந்த வாரம், போட்டியாளர்கள் அனைவரும் அரசியல் கட்சியினராக மாறி போட்டிக்களம் கண்டு வருகின்றனர். இப்போது ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ‘உரக்கச்சொல்’ என்ற புதிய டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் மற்றவர்களுக்கு அநீதி என்று தோன்றுபவற்றை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காக ப்ரியங்கா, சிபி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் மேடையில் நிற்கின்றனர்.
‘செம்பருத்தி’ ஷபானா & ‘சத்யா’ ஆயிஷா இருவரின் ஃபெர்பாமன்ஸ் வீடியோ- குவியும் லைக்குகள்!
இப்போது ப்ரியங்கா தனக்கு சொல்லிய சில விஷயங்களை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார் ராஜு. அந்த வகையில் சைலன்ட் கேம், ஃசேப் கேம் ஆடுவதாக ப்ரியங்கா சொன்னது எதனால் என்று ராஜு கேட்க, உங்களுக்கு தேவையான மக்களுக்கு மட்டும் தான் நீங்கள் குரல் கொடுத்து கேள்விகள் கேட்கிறீர்கள். மற்றவர்களை கண்டு கொள்வதில்லை என ப்ரியங்கா பதில் கூறுகிறார். இதற்கு பதில் சொல்லும் ராஜு, கண் முன்னாடி நடக்கும் விஷயங்களை பற்றி பேசலாமா கூடாதா என கேட்க, தாராளமாக பேசலாம்.
ஆனால் அதை பொது வெளியில் பேசக்கூடாது என ப்ரியங்கா சொல்கிறார். அப்போது, தனியாக பேசக்கூடிய இடம் எதாவது ஒன்று இருந்தால் அதை சொல்லுங்கள் என ராஜு நக்கலாக கேட்க, நீ பொறுமையாக பேசக்கூடிய ஆள் தானே என சொல்லிக்கொண்டிருக்கும் போதே அக்ஷரா, பாவனி உள்ளிட்ட சிலர் கைகளை தட்ட அவர்களை பார்த்து ப்ரியங்கா கிண்டல் செய்வதை போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.