விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய வருண், அபிநய்? போட்டியாளர்கள் சொன்ன பதில்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்து கமல் அறிவிக்க இருக்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 4 வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். தற்போது 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் இன்று ஒருவர் கட்டாயம் வெளியிற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், கடுமையான போட்டிகள் வழங்கப்பட்டு பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – மீண்டும் 3% DA அதிகரிப்பு? தகவல் வெளியீடு!
கடந்த ப்ரோமோவில் நடிகர் ஆதி பிரியங்கா காப்பாற்றப்பட்டார் என அறிவித்தார். அது புதுமையாக இருந்தது. தற்போது நாமினேட் செய்யப்பட்டவர்களில் பலர் காப்பாற்றப்பட்டு அபிநய் மற்றும் வருண் மற்றும் இருக்கின்றனர். கமல்ஹாசன் இவர்களில் யாரு வெளியேறுவார்கள் என கேட்க, பிரியங்கா ஒரு பையன் காப்பாற்றப்படுவார். அது வருண் என சொல்கிறார். பாவ்னியிடம் கேட்டதற்கு அவரும் வருண் பெயரை சொல்கிறார். ராஜுவிடம் கேட்டதற்கு அபிநய் பெயரை சொல்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினி எப்படி உள்ளார் தெரியுமா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
பின் கமல் அவர்கள் என்ன முடிவு செய்திருக்கிறார்கள் என தெரியவில்லை என்று சொல்லி கவரை பிரிக்கிறார். அபிநய் இந்த சீசனில் இருந்து வெளியேறி இருக்கிறார் என தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அடுத்த வாரம் இரண்டு எலிமினேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அபிநய் எலிமினேட் செய்யப்பட்டதால் போட்டியாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது பற்றி இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.