‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினி எப்படி உள்ளார் தெரியுமா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் 600 எபிசோடுகளுக்கு மேல் நடித்த ரோஷினி ஹரிபிரியன் தற்போது சீரியலில் இருந்து விலகிய நிலையில் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ரோஷினி ஹரிபிரியன்:
தமிழ் சின்னத்திரையில் டாப் வரிசையில் இருக்கும் சீரியல் தான் விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல், இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் நடிக்கிறார். தொடக்கத்தில் இருந்து 600 எபிசோடுகளுக்கு மேல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். ஆனால் திடீரென அவர் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் அவர் சீரியலில் வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ் பாடத்தாள் கட்டாயம்!
ரோஷினி விலக்கலுக்கு சரியான காரணம் எதுவும் அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இது குறித்து பாரதி கண்ணம்மா இயக்குனர் பிரவீன் கூறுகையில், ரோஷினிக்கு பல படங்களில் இருந்து வாய்ப்புகள் வந்தது, சீரியலால் அவருக்கு அந்த வாய்ப்புகள் தவறி இருக்கலாம் அதனால் கூட அவர் சீரியலில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்தார். அல்லது அவர் விரைவில் திருமணம் செய்ய இருக்கலாம் என தெரிவித்தார். அவர் சீரியலில் இருந்து விலகி மன அமைதிக்காக ஊட்டி சென்று அங்கே புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
பாரதி, அகிலுடன் இணைந்த லட்சுமி மற்றும் ஹேமா – விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த எபிசோட்!
அதன் பின் அவர் எந்த தகவலும் வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் செம அழகாக சிரித்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மாவில் இந்த சிரிப்பை மிஸ் செய்வதாக கமெண்ட் செய்து இருக்கின்றனர். விரைவில் அவரை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆறுதல் அடைகின்றனர்.