விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வர போகும் ட்விஸ்ட் – கோபிக்கு வந்த சிக்கல்.. வெளியான அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா சமைத்த உணவு ராமமூர்த்திக்கு பிடிக்காமல் இருக்கிறது. அடுத்து வரும் எபிசோடில் இனியாவிற்கும் ராதிகாவிற்கும் சண்டை வர இருக்கிறது. அதில் கோபி யார் பக்கம் இருப்பார் என்பதே அடுத்த வார ட்விஸ்ட்டாக வர இருக்கிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியல் கதை சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாள் எபிசோடும் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத திருப்பங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் அடுத்த வார எபிசோடுகளில் வர இருக்கும் ட்விஸ்ட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா அனைவருக்கும் சாப்பாடு செய்து வைக்கிறார். ராமமூர்த்தியை எப்படி கூப்பிடுவது என தெரியாமல் இருக்க, கோபியிடம் சொல்லி கூப்பிட சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
பின் கோபி கூப்பிட, ராதிகா சமைத்த சாம்பாரை ராமமூர்த்தி குறை சொல்கிறார். கோபிக்கு அந்த சாப்பாடு பிடிக்க, ஆனால் இனியாவிற்கும் ராமமூர்த்திக்கும் சாப்பாடு பிடிக்காமல் இருக்கிறது. இந்நிலையில் அடுத்து வரும் காட்சிகளில் இனியாவிற்கும் ராதிகாவிற்கும் இடையே பயங்கர சண்டை வர இருக்கிறது. அதில் இனியா கோபியிடம் நீங்க யாருக்கு சப்போர்ட் செய்ய போறீங்க என கேட்க, உடனே கோபி இனியா பக்கம் நிற்கிறார். அதனால் ராதிகாவுக்கு பயங்கர கோவம் வருகிறது. அதனால் அவர் கோபியிடம் பயங்கரமாக சண்டையிட இருக்கிறார். இதெல்லாம் இந்த வார எபிசோடில் காட்டப்பட இருக்கிறது.