முதலிரவை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி, அப்பா மீது கோவமாக இருக்கும் இனியா – இன்றைய எபிசோட்!

0
முதலிரவை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி, அப்பா மீது கோவமாக இருக்கும் இனியா - இன்றைய எபிசோட்!
முதலிரவை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி, அப்பா மீது கோவமாக இருக்கும் இனியா - இன்றைய எபிசோட்!முதலிரவை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி, அப்பா மீது கோவமாக இருக்கும் இனியா - இன்றைய எபிசோட்!
முதலிரவை நினைத்து பதட்டமாக இருக்கும் கோபி, அப்பா மீது கோவமாக இருக்கும் இனியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவுடன் முதலிரவை நினைத்து சந்தோசமாக இருக்கிறார். மறுபக்கம் ராதிகாவின் அம்மா இனிமேல் உங்களுக்கு ஒரே ஒரு குடும்பம் தான் என சொல்லி எச்சரிக்கை செய்கிறார். பின் இனியா போன் செய்து இனிமேல் நீங்க எனக்கு டாடி இல்லை என சொல்லி வருத்தமாக பேசுகிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா திருமணம் முடிந்த நிலையில் அனைவரும் அவரை தனியாக விட்டு சென்றுவிடுகின்றனர். கோபி என்ன யாரையும் காணவில்லை என பதட்டமாக இருக்கிறார்.எல்லாரும் தூங்கிட்டாங்களா என கேட்க, கோபி நீ புது மாப்பிள்ளை இல்லை பழைய மாப்பிள்ளை தான் இருந்தாலும் தனியாக விட்டு தூங்கிட்டாங்களா என தனியாக பேசிக் கொண்டே இருக்கிறார். பின் ராதிகாவின் அம்மாவும், சந்துருவும் வருகின்றனர். அப்போது ராதிகாவின் அம்மா நீ சொல்கிறாயா என சொல்லவா என கேட்க, ராதிகாவின் அண்ணன் நீங்களே சொல்லுங்க என சொல்கிறார். அப்போது ராதிகாவின் அம்மா உங்க வீட்டில் இருந்து வந்து பேசியது எல்லாம் சரி இல்லை என சொல்கிறார்.

அப்போது கோபி ஒரே பையன் என்பதால் பேசிட்டாங்க என சொல்கிறார். இனிமேல் இப்படி நடக்க கூடாது என சந்துரு சொல்கிறார். கோபி என் அம்மாவை நான் எதிர்த்து பேசி பழக்கமே இல்லை என சொல்கிறார். பின் ராதிகாவின் அம்மா மயூரா இனிமேல் உங்க பொண்ணு அவளை நீங்க அப்படி தான் பார்த்து கொள்ள வேண்டும் என சொல்ல, கோபி அதை நீங்க சொல்ல வேண்டுமா என கேட்கிறார். இனிமேல் ராதிகா தான் உங்க மனைவி, மயூரா மட்டும் தான் உங்க குழந்தை, உங்களுக்கு இது தான் குடும்பம் 2 குடும்பம் எல்லாம் இல்லை என சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகிறார்.

மறுபக்கம், பின் ராதிகாவின் அண்ணி ராதிகாவை தயார் செய்ய, மயூராவை தூங்க வைத்துவிட்டதாக ராதிகாவின் அம்மா சொல்கிறார். இனிமேல் நீ நிம்மதியாக இருக்க வேண்டும் என சொல்ல, மயூரா அப்போது வந்துவிடுகிறார். கனவில் பேய் வந்தது என சொல்ல, மயூரா நான் மம்மி கூட தான் தூங்குவேன் என சொல்கிறார். ஆனால் ராதிகாவின் அம்மா மயூராவை அழைத்து கொண்டு செல்கிறார். பின் கோபி முதலிரவை நினைத்து சந்தோசமாக இருக்க, ராதிகா அப்போது வருகிறார். கோபி ராதிகாவை ரசித்து பேச, அப்போது ராதிகா நான் எப்படி இருந்தேன் ஆனால் மண்டபத்தில் என்னை பற்றி பேசி அசிங்கப்படுத்திவிட்டார்கள் என நினைத்து அழுகிறார்.

தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை – மின்சார வாரியம் தகவல்!

பின் எழில் பாக்கியாவிடம் பேச, கல்யாணத்திற்கு முன்னாடி எப்படி இருந்தேன் அந்த கதையை பற்றி பாக்கியா சொல்கிறார். நான் மிகவும் நன்றாக படிப்பேன் என சொல்ல, ஆனால் அப்பா இறந்த பின் எல்லாம் வீணாகிவிட்டது என சொல்கிறார். எழில் இனிமேல் நீ உனக்காக வாழ வேண்டும் என சொல்ல, பாக்கியா நீங்க அப்பா இல்லாமல் கவலைப்பட கூடாது என சொல்கிறார். பின் பாக்கியா தூங்க செல்ல இனியா தூங்க முடியாமல் இருக்கிறார். நான் ஒரு போன் செய்துவிட்டு வருகிறேன் என சொல்ல, கோபிக்கு இனியா போன் செய்கிறார். நீங்க எப்படி ராதிகா ஆன்டியை கல்யாணம் செய்தீங்க இனிமேல் நீங்க வேண்டாம் என சொல்ல, கோபி இனியாவை சமாதானம் செய்கிறார். அதை பார்த்து ராதிகாவும் ராதிகாவின் அம்மாவும் கோவப்படுகின்றனர்.

இதெல்லாம் சரியாக வராது நீ தான் தடுக்க வேண்டும் என ராதிகாவின் அம்மா சொல்ல ராதிகா நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். இனியா போனை வைத்துவிட்டு பாக்கியா மடியில் படுத்து தூங்குகிறார். பின் ராதிகா என்ன ஆச்சு என கேட்க, இனியா என்னை மிஸ் செய்வதாக சொல்கிறார். பின் கோபி நான் சென்று பேஸ் வாஷ் செய்கிறேன் என சொல்ல, அப்போது மயூரா வந்து நான் இங்கே தான் தூங்குவேன் என சொல்கிறார். ராதிகாவின் அம்மா கூப்பிட்டும் வரவில்லை. உடனே ராதிகா நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல, மயூரா அருகே தூங்குகிறார். கோபி அவளை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!