தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை – மின்சார வாரியம் தகவல்!
நாளை மறுநாள் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் தென்காசி பகுதி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும். ஏனெனில் மின் கம்பங்களில் இருந்து சீரான மின் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பணிகள் மின்வாரிய ஊழியர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அவ்விதமாக நாளை மறுநாள் அக்டோபர் 11 தென்காசியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படவுள்ளதாக அம்மாவட்ட மின்வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
வாகன ஓட்டிகளே உஷார் உஷார்.. இனி 3 வருஷம் ஜெயில், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் – அரசு உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதனால் தென்காசி மங்கம்மாள் சாலை துணை மின்நிலையத்திற்க்கு உட்பட்ட கீழப்புலியூர், காளிதாசன் நகர், சக்தி நகர், மங்கம்மாள் சாலை பகுதிகள், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தென்காசி புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் அக்டோபர் 11 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தென்காசி மின்வாரிய செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்