ரேஷன் கார்டு கேட்டு வீட்டிற்கு வரும் கோபி.. முடியாது என சொல்லும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
ரேஷன் கார்டு கேட்டு வீட்டிற்கு வரும் கோபி.. முடியாது என சொல்லும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
ரேஷன் கார்டு கேட்டு வீட்டிற்கு வரும் கோபி.. முடியாது என சொல்லும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
ரேஷன் கார்டு கேட்டு வீட்டிற்கு வரும் கோபி.. முடியாது என சொல்லும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா இனியாவிற்கு ஆறுதல் சொல்ல, நீ எப்படி அம்மா மாறிட்ட என இனியா ஆச்சர்யப்படுகிறார். மறுபக்கம் வர்ஷினி எழில் குடும்பத்திடம் நல்ல பெயர் வாங்க நினைக்கிறார். பின் கோபி ரேஷன் கார்டு வாங்க வீட்டிற்கு வருகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவிடம் உன் அப்பா நடந்து கொண்டதற்கு நீ கவலைப்படாதே என சொல்ல, எப்படி அம்மா நீ மாறிட்டா என இனியா கேட்கிறார். நீ நன்றாக படித்து மார்க் வாங்க வேண்டும் என பாக்கியா சொல்கிறார். மறுபக்கம் எழில் அமிர்தாவிடம் பாக்கியா சொன்னது பற்றி சொல்கிறார். என் அப்பா இப்படி முடிவு செய்ததால் உங்க வீட்டில் என் மீது நம்பிக்கை குறைந்து இருக்கும். ஆனால் இப்போது குடும்பத்தில் இருக்கும் நிலைமையில் உங்க வீட்டில் வந்து பேச முடியாது. அம்மா கொஞ்சம் டைம் கேட்டார் என சொல்லி, கையை பிடித்து நான் உங்களுடன் இருக்கேன் என சொல்ல, அப்போது வர்ஷினி வந்து பார்த்து விடுகிறார்.

அவருக்கு எழில் அமிர்தா கையை பிடித்தது கோவம் வருகிறது. பின் வர்ஷினி எழில் வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்ததும் சோப்பு விற்க வந்தவர் என ராமமூர்த்தி நினைக்கிறார். பின் நான் எழில் ப்ரொடியூசர் பொண்ணு என வர்ஷினி சொல்லி ஆசிர்வாதம் வாங்குகிறார். பின் ஈஸ்வரிக்கு பட்டு புடவை எல்லாம் கொடுத்து சந்தோசமாக பேசுகிறார். மறுபக்கம் ராதிகா போஸ்ட் பற்றி பேசிக் கொண்டிருக்க கோவமாக பேசுகிறார். அப்போது கோபி என்ன ஆச்சு என கேட்க அட்ரெஸ் இல்லாமல் பேங்க் சென்று வர நேரமாகும் என ராதிகா சொல்கிறார்.

உங்க வீட்டில் ரேஷன் கார்டு வாங்க சொன்னேன்ல என்னாச்சு என கேட்க, கோபி அவள் தான் கொடுக்கமாட்டேன் என சொல்லி இருக்காளே என சொல்கிறார். இப்போது உங்க பெயரும் வேண்டும் அதனால் உடனே அட்ரெஸ் மாற்ற வேண்டும் என ராதிகா சொல்ல, என்ன செய்வது என தெரியவில்லை என கோபி சொல்கிறார். பின் ராதிகா சென்று ரேஷன் கார்டு கேளுங்க என சொல்கிறார். கோபி வேகமாக வீட்டிற்குள் செல்கிறார். அங்கே செழியன் போன் பேசிக் கொண்டிருக்க, கோபி வந்ததை பார்த்து தாத்தா கோபப்படுகிறார். கோபி வீட்டிற்குள் வர நீ எதற்கு இங்கே வந்தாய் என ராமமூர்த்தி கேட்கிறார்.

பள்ளியில் இனியாவை பாசமாக பார்க்க வந்த கோபி .. பேச மறுக்கும் இனியா – பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான கட்டம்!

ரேஷன் கார்டு வேண்டும் என சொல்ல, பாக்கியா தர முடியாது என சொல்கிறார். கோபி உங்க சொத்தை கேட்பதாக சொல்ல, பாக்கியா இங்கே வந்து ஏன் சண்டை போடுறீங்க என கேட்கிறார். செழியன் என்ன தான் கேட்டார் என கேட்க, ரேஷன் கார்டு வேண்டும் என கோபி சொல்கிறார். ராமமூர்த்தி கொடுக்க முடியாது என சொல்கிறார். ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டும் புரிந்து கொள்ளுங்கள் என கோபி சொல்கிறார். ஆனால் பாக்கியா நீங்க சொல்லும் வேலை எல்லாம் செய்ய நான் உங்க பொண்டாட்டி கிடையாது என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!