பள்ளியில் இனியாவை பாசமாக பார்க்க வந்த கோபி .. பேச மறுக்கும் இனியா – பாக்கியலட்சுமி சீரியலில் விறுவிறுப்பான கட்டம்!
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா அப்பா மீது அதிக பாசம் வைக்கும் பெண்ணாக இருந்து வந்தார். ஆனால் கோபி செய்த காரியத்தால் இனியாவிற்கு கோபியின் மீது தற்போது வெறுப்பு வந்து விட்டது.
இனியாவின் கோவம்:
பாக்கியலட்சுமி தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே தனது மூலதனமாக வைத்து வாழ்வில் ஒவ்வொரு கட்டத்தையும் போராடி வென்று வருகிறார். தனக்கு தெரிந்த சமையல் தொழிலை வைத்து கேட்டரிங் தொடங்கி இப்பொழுது அதன் மூலம் பெரிய ஆர்டர்களை பெற்று வருகிறார். கோபி ராதிகா தான் முக்கியம் என்று தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையிலும், பாக்கியா தனது கேட்டரிங் தொழில் மூலம் மொத்த குடும்பத்தையும் நடத்துகிறார்.
OTT தளங்களை இலவசமாக அளிக்கும் AIRTEL நிறுவனம் – சூப்பர் பிளான்கள்!
Exams Daily Mobile App Download
Follow our Instagram for more Latest Updates
பாக்கியா குடும்பத்தில் இருக்கும் போது கோபி அனைத்தையும் அதிகாரமாக மட்டுமே பேசி வந்தார். ஆனால் ராதிகா வீட்டில் காபி கேட்க கூட மிகவும் கெஞ்சி கேட்க வேண்டி இருந்து வருகிறது. இந்நிலையில், இனியா மற்றும் மயூவின் ஸ்கூலில் பேரன்ட்ஸ் மீட்டிங் வைக்கிறார்கள். அப்போது, இனியாவை பார்த்து பேச வந்த கோபியை மயூ, நீங்க என் டாடி தான என்று கையை பிடித்து இழுத்து செல்கிறார். இதை பார்த்த இனியாவின் கிளாஸ் மேட்ஸ் இனியாவை சூழ்ந்து கொண்டு இதை பற்றி கேட்கிறார்கள். இதனால் இனியா அவமானத்தில் கோபி மீது அதிக கோவம் கொள்கிறார்.