ராதிகா அலுவலகத்தில் கேட்டரிங் ஆர்டர் வாங்கிய பாக்கியா.. விபத்தில் சிக்கிய இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் ஜெனியும் கேன்டீன் ஆர்டர் வாங்க புது ஆபிஸ் வந்திருக்கின்றனர். அது ராதிகா அலுவலகம் என தெரியாமல் இருவரும் ஆர்டர் வழங்கப்படுகிறது. பின் இனியா சென்ற வேன் விபத்து ஏற்பட்டதாக கோபிக்கு போன் வருகிறது.
பாக்கியலட்சுமி
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் ஜெனியும் புது அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது உள்ளே வர சொல்ல, பாக்கியாவும் ஜெனியும் உள்ளே செல்கின்றனர். அங்கே ராஜசேகரன் சார் இருக்கிறார். அப்போது ராஜசேகரன் இவங்க தான் நான் சொன்னவங்க என சொல்ல, உடனே அந்த ஆபிசர் சாப்பாடு நன்றாக இருக்க வேண்டும் அது தான் எனக்கு வேண்டும் என சொல்ல, பாக்கியா அதெல்லாம் சரியாக செய்துவிடலாம் என சொல்கிறார். பின் ஜெனி எங்களிடம் 25 பேர் வேலை பார்ப்பதாக சொல்கிறார். பாக்கியா தடுக்க வர ஜெனி பாக்கியா கையை பிடித்து கொள்கிறார். பின் ராஜசேகரன் அவங்க கொடுக்கும் ஆர்டரை செய்தால் போதும் என சொல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
பின் அந்த ஆபிசர் பாக்கியாவிடம் ஒரு 7 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும் என சொல்ல, உடனே ஜெனி அதெல்லாம் பிரச்சனை இல்லை என சொல்கிறார். பின் பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். வெளியே வந்து பாக்கியாவும் ஜெனியும் பேசிக் கொண்டிருக்க அப்போது தான் அது ராதிகா வேலை செய்யும் அலுவலகம் என தெரிய வருகிறது. பாக்கியா ராதிகாவை பார்க்கவில்லை. ஆனால் ராதிகா பாக்கியாவை பார்க்கிறார். பின் ஆபிசரிடம் சென்று யார் அவங்க என கேட்க, அவங்களை உங்களுக்கு தெரியுமா என அந்த ஆபிசர் கேட்கிறார். தெரியும் என சொல்ல, அவங்களுக்கு தான் கேட்டரிங் ஆர்டர் கொடுத்து இருப்பதாக சொல்கிறார். ராதிகா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்.
மறுபக்கம் கோபியும் ராதிகாவும் ஹோட்டலில் சந்தித்து கொள்கின்றனர். அப்போது கோபி இனியாவுடன் நடந்த பிரச்சனைக்கு மன்னிப்பு கேட்கிறார். இனிமேல் இப்படி நடக்காது என சொல்ல, உடனே கோபி மயூராவை என் மகள் என நீ பிரித்து பார்க்காதே என சொல்கிறார். பின் ராதிகா பாக்கியா அவருடைய அலுவலகத்திற்கு வந்தது பற்றி சொல்கிறார். அப்போது கோபி அவளுக்கு கேட்டரிங் ஆர்டர் கொடுக்காதீங்க, நீ சொன்னால் அந்த ஆபிசர் கேட்பார் தான என கேட்கிறார். ஆமாம் கேட்பார் ஆனால் அப்படி நான் செய்யமாட்டேன் என ராதிகா சொல்ல, அந்த நேரம் கோபிக்கு போன் ஒன்று வருகிறது. அதில் இனியாவிற்கு விபத்து நடந்ததாக சொல்ல, உடனே கோபி கிளம்பி செல்கிறார்.
மாதம் ரூ.100 செலுத்தி வந்தால் ரூ. 3000 ஓய்வூதியம் – மத்திய அரசின் அசத்தலான திட்டம்!
பின் எழில் அமிர்தா புகைப்படத்தை பார்த்து கொண்டிருக்க ஈஸ்வரி என்ன பார்க்கிறாய் என கேட்கிறார். உடனே எழில் போனை மறைத்துவிடுகிறார். பின் பாக்கியாவும் ஜெனியும் வீட்டிற்கு வர கேட்டரிங் ஆர்டர் கிடைத்துள்ளதாக சொல்கிறார். ஆனால் பாக்கியா 7 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என சொன்னதாக சொல்கிறார். எழில் அதை கேட்டு அதிர்ச்சி அடைய, அப்போது நிகிலா அம்மா பாக்கியாவிற்கு போன் செய்கிறார். பாக்கியாவிடம் இனியாவும் டூர் சென்று இருக்கிறாளா என கேட்க, ஆமாம் என பாக்கியா சொல்கிறார். உடனே அவங்க சென்ற வண்டி விபத்து ஏற்பட்டுவிட்டதாக சொல்ல பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.