இனியாவிற்கு ஆதரவாக பேசும் கோபி.. செகரட்டரியிடம் சண்டை போடும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
இனியாவிற்கு ஆதரவாக பேசும் கோபி.. செகரட்டரியிடம் சண்டை போடும் பாக்கியா - இன்றைய
இனியாவிற்கு ஆதரவாக பேசும் கோபி.. செகரட்டரியிடம் சண்டை போடும் பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
இனியாவிற்கு ஆதரவாக பேசும் கோபி.. செகரட்டரியிடம் சண்டை போடும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ராதிகா சண்டையில் கோபி இனியாவிற்கு ஆதரவாக இருக்கிறார். அதனால் ராதிகா பயங்கரமாக கோவித்து கொள்கிறார். மறுபக்கம் தாத்தா பாக்கியாவிடம் இனியாவின் பிக்னிக் பற்றி சொல்ல பாக்கியா அதை நினைத்து கவலைப்படுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா ராதிகா சண்டை நடக்க உடனே கோபி ராதிகாவை அமைதியாக இருக்க சொல்கிறார். கோபி சின்ன பெண்ணிடம் சரிசமமாக போட்டி போட்டு பேசுகிறாய் தப்பு என சொல்கிறார். பின் ராதிகா உங்க வீட்டில் எல்லாரும் என்னை பேசட்டும் இவளும் என்னை பேசட்டும் நான் தப்பு என சொல்லிவிட்டு உள்ளே சென்று கதவை மூடி கொள்கிறார். பின் மயூராவை கோபி பயப்பட வேண்டாம் என சொல்கிறார். அப்போது ராதிகா மயூராவை உள்ளே வர சொல்லி கதவை மூடி கொள்கிறார். மறுபக்கம் ராமமூர்த்தி தாத்தா பாக்கியா வீட்டிற்கு வருகிறார். ஆனால் தாத்தாவிடம் பேசாமல் ஈஸ்வரி முகத்தை திருப்பி கொள்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

பாக்கியா நீங்க இங்கே வருவது தெரிந்தால் அவருக்கு புடிக்காதே என கேட்க, எனக்கு என்ன அவனை போல 2 பொண்டாட்டியா இருக்கிறது எனக்கு என கேட்கிறார். பின் பாக்கியா இனியா எப்படி இருக்கிறாள் நன்றாக சாப்பிடுகிறாளா என கேட்க அதெல்லாம் சாப்பிடுவதாக தாத்தா சொல்கிறார். அவள் தான் நன்றாக சமைக்கமாட்டாளே என்ன சாப்பிட போகிறாள் என ஈஸ்வரி கேட்கிறார். அப்போது பாக்கியா சாயங்காலம் வந்து படிக்கிறாளா என கேட்கிறார். நீ இப்படி கேட்கிறாய் ஆனால் அவன் அவளிடம் எதுவும் கேட்பதில்லை என சொல்கிறார். இனியா ஸ்கூலில் இருந்து பிக்னிக் கூட்டிக் கொண்டு போகிறார்களாம்.

அவன் ஒன்றும் கேட்காமல் பணம் வேண்டுமா என மட்டும் கேட்கிறான் என சொல்கிறார். பிக்னிக் எங்கே போகிறாள், அவங்க ஸ்கூலில் எல்லாரும் போறார்களா, போன் கொண்டு போகலாமா என பாக்கியா கேட்கிறார். பின் எழில் அம்மா இப்படி கேள்வி கேட்பதால் தான் இனியாவிற்கு அம்மாவை பிடிக்கவில்லை என சொல்கிறார். பின் பாக்கியா சாப்பாடு டெலிவரி செய்ய சொல்ல, ராகினியின் மகனை நாய் கடித்துவிட்டதாக சொல்கிறார். அப்போது ராகினி வர உன் மகனை நாய் கடித்துவிட்டதா என கேட்கிறார். ஆமாம் என செல்வி சொல்கிறார்.

பாக்கியா எழில் வேற நேரமாக வருவான் எனக்கு பயமாக இருப்பதாக சொல்கிறார். நம்ம தெருவில் அசோசியேசன் எதற்கு இருக்கிறது என தெரியாமல் இருப்பதாக சொல்ல, பாக்கியா நாம பேசி பார்க்கலாம் என அவரை சந்திக்க செல்கிறார். அப்போது செகரட்டரி வீட்டிற்கு செல்ல அங்கே அவரிடம் ராகினியின் மகனை நாய் கடித்துவிட்டதாக சொல்கிறார். பின் என் அத்தையிடம் ஒருவன் செயின் பறிக்க முயற்சி செய்தான், தெரு லைட் எதுவும் எரியவில்லை என பாக்கியா சொல்கிறார். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது என செகரட்டரி சொல்கிறார்.

மகளிர் சுய உதவி குழுவினருக்கு மின்னணு வர்த்தக தளம் அறிமுகம் – இனி பொருட்களை விற்பது ஈஸி!!

உடனே பாக்கியா நீங்க ஒரு வேலையும் செய்யவில்லை என்றால் எதற்கு நாங்க பணம் கொடுக்க வேண்டும் தேர்தல் வருகிறது அதில் நான் பார்த்துக் கொள்கிறேன் என பாக்கியா சத்தம் போடுகிறார். பின் ராதிகாவிடம் கோபி பேச வர ஆனால் ராதிகா பேசமாட்டேன் என சொல்கிறார். பின் இனியா எனக்கு ஸ்கூலிற்கு நேரமாகிவிட்டதாக சொல்கிறார். கோபி மீது உள்ள கோவத்தை மயூரா மீது ராதிகா காட்ட கோபி ஏன் திட்டுகிறாய் என கேட்கிறார். அப்போது ராதிகா மயூரா என் பொண்ணு நான் என்ன வேணாலும் செய்வேன் என சொல்கிறார். கோபி ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய் என கேட்க, ஆமாம் உங்க பொண்ணை திட்ட எனக்கு உரிமை இல்லை, அப்பறம் என் பொண்ணை திட்டினால் உங்களுக்கு என்ன என ராதிகா கேட்க,இனியா கிளம்பலாம் என சொல்கிறார். தாத்தாவிடம் சொல்லிவிட்டு இனியா கிளம்புகிறார். பெரியவங்க பிரச்சனையில் குழந்தைங்க பாதிக்கப்பட கூடாது என ராமமூர்த்தி சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!