தேர்தலில் வெற்றி பெற்று மாஸாக பேசிய பாக்கியா.. கோவப்பட்டு கோபியிடம் சண்டையிடும் ராதிகா – இன்றைய எபிசோட்!

0
தேர்தலில் வெற்றி பெற்று மாஸாக பேசிய பாக்கியா.. கோவப்பட்டு கோபியிடம் சண்டையிடும் ராதிகா - இன்றைய எபிசோட்!
தேர்தலில் வெற்றி பெற்று மாஸாக பேசிய பாக்கியா.. கோவப்பட்டு கோபியிடம் சண்டையிடும் ராதிகா - இன்றைய எபிசோட்!
தேர்தலில் வெற்றி பெற்று மாஸாக பேசிய பாக்கியா.. கோவப்பட்டு கோபியிடம் சண்டையிடும் ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா தேர்தலில் வெற்றி பெற்று அருமையாக பேசுகிறார். அவருடைய பேச்சை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் சந்தோசப்படுகின்றனர். ராதிகாவும் கோபியும் தோற்று போனதை நினைத்து கோவமாக இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற ராமமூர்த்தி அவரை பேச சொல்கிறார். ஆனால் பாக்கியா வேண்டாம் என சொல்ல, உடனே ராமமூர்த்தி யார் யாரோ பேசுகிறார்கள் உனக்கு பேச என்ன என கேட்கிறார். பின் பாக்கியா மேடை ஏறி பேசுகிறார். ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி என பாக்கியா சொல்கிறார். அப்போது கோபி கிளம்பலாம் என சொல்ல, செல்வி சார் அக்கா பேசுவதை கேட்டு சொல்லுங்கள் என சொல்கிறார். பின் பாக்கியா செகரட்டரி வேலை என்பது கஷ்டமாக தான் இருக்கும். அது எல்லாம் தெரிந்து தான் நான் இந்த தேர்தலில் நிற்கிறேன் என சொல்கிறார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அன்னைக்கு மாமா குடும்பத்தை பார்ப்பவர்கள் தான் இந்த ஏரியாவை பார்த்துக் கொள்ள முடியும் என சொன்னார். அது போல சமூகம் என்பது பெரிய குடும்பம், அதனால் என் குடும்பத்தை போல இந்த சமூகத்தை பார்த்துக் கொள்வேன் என சொல்கிறார். பின் பாக்கியா என்னை ஸ்கூல் பாதியிலேயே நிறுத்தியவள் என கிண்டல் செய்தார்கள். ஆனால் சிட்டியில் இருப்பவர்களை விட, கிராமத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என கோபியை குத்தி காட்டி பேசுகிறார். பின் ராதிகா கிளம்ப, பாக்கியாவை பார்த்து முறைக்கிறார்.

மறுபக்கம் செல்வி பாக்கியா வாழ்க என சத்தம் போடுகிறார். பின் ஈஸ்வரி வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்க பாக்கியா வருகிறார். அப்போது செல்வி ஆரத்தி எடுக்கிறார். பின் ராமமூர்த்தி வந்து மாலை போட்டு பாக்கியாவை சந்தோசப்படுகிறார். பின் ஈஸ்வரி செல்வி இந்த ஏரியாவில் இருக்கும் எல்லா பிரச்சனையும் சரி செய்ய வேண்டும் என சொல்கிறார். பாக்கியா ராதிகா பேசியதையும், கோபி பேசியதையும் நினைத்து பார்க்கிறார். பின் ராதிகா கோபி வீட்டிற்கு வர, மயூரா நீங்க ஜெயித்துவிடீர்களா என கேட்கிறார். ஆனால் கோபி மயூராவை உள்ளே போக சொல்கிறார். ராதிகாவிடம் கோபி பேச போக, ராதிகா இந்த தேர்தல் எல்லாம் நான் கேட்டேனா என கேட்கிறார்.

அப்போது கோபி நான் கூட எதிர்பார்க்கவில்லை என சொல்ல, எல்லாருக்கும் அவங்களை தெரிந்து இருக்கிறது. ஆனால் உங்களை தெரியவில்லை என சத்தம் போடுகிறார். எவ்வளவு அசிங்கம் எனக்கு நான் இதெல்லாம் கேட்டேனா என ராதிகா கோவமாக பேசுகிறார். பாக்கியா நான் நினைத்தது போல இல்லை அவங்க வேற மாதிரி இருப்பதாக சொல்கிறார். பின் கோபி பாக்கியாவை நினைத்து கோபப்படுகிறார். மறுபக்கம் ராஜசேகரன் சாரிடம் பாக்கியா லோன் கேட்டு செல்கிறார். அப்போது அவர் ஒரு பிரச்சனையும் இல்லை என சொல்லி பணத்தை கொடுக்கிறார்.

மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி – ஏற்பாடுகள் தீவிரம்!

பாக்கியாவிடம் சரியாக லோன் கட்ட வேண்டும் என சொல்லி அனுப்ப, பாக்கியா அதை நினைத்து சந்தோசமாக இருக்கிறார். பின் வீட்டிற்கு வந்த பாக்கியா எல்லாரிடமும் சந்தோசமாக இருக்கிறார். எழில் என்ன நடந்துச்சு என கேட்க, உடனே பாக்கியா போனை காட்டி பணம் கிடைத்துவிட்டதாக சொல்கிறார். பாக்கியா அதை கேட்டு சந்தோசப்படுகிறார். இன்று காலையில் உங்க முகத்தில் தான் அத்தை முழித்தேன் அதனால் தான் எனக்கு எல்லாம் கிடைத்துவிட்டது என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!