பாக்கியா தேர்தலில் நிற்க போவது பற்றி தெரிந்து கொண்ட கோபி.. அமிர்தவால் சண்டை போடும் எழில் செழியன் – இன்றைய எபிசோட்!

0
பாக்கியா தேர்தலில் நிற்க போவது பற்றி தெரிந்து கொண்ட கோபி.. அமிர்தவால் சண்டை போடும் எழில் செழியன் - இன்றைய எபிசோட்!
பாக்கியா தேர்தலில் நிற்க போவது பற்றி தெரிந்து கொண்ட கோபி.. அமிர்தவால் சண்டை போடும் எழில் செழியன் - இன்றைய எபிசோட்!
பாக்கியா தேர்தலில் நிற்க போவது பற்றி தெரிந்து கொண்ட கோபி.. அமிர்தவால் சண்டை போடும் எழில் செழியன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா தேர்தலில் நிற்பது குறித்து பழைய செகரட்டரி கோபியிடம் பேசுகிறார். செல்வி அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் இனியாவை பாக்கியாவிடம் கோபி பேசவிடாமல் செய்ய பாக்கியா அதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் செழியன் எழில் அமிர்தாவால் சண்டை போடுகின்றனர்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ரோட்டில் பழைய செகரட்டரியை பார்த்து பேசுகிறார். அவர் கோபியிடம் ராதிகா பற்றி கேட்கிறார். அதன் பின் அடுத்த தேர்தலில் உங்க பழைய மனைவி தான் நிற்க போவதாக சொன்னதாக சொல்கிறார். உடனே கோபி அவளுக்கு அதை பற்றி எதுவும் தெரியாது என சொல்கிறார். பின் அந்த செகரட்டரி உடன் ஆதரவிற்கு ஆள் இருந்தால் எல்லாம் செய்யலாம் என அர்த்தம் என நினைப்பதாக சொல்கிறார். பின் கோபி அவளுக்கு அதை பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது என சொல்ல, முதலில் தேர்தலில் நிற்பதாக சொன்னார்கள் ஆனால் அதன் பின் நிற்கமாட்டேன் என சொன்னதாக சொல்கிறார். உடனே கோபி அவள் பயந்து இருப்பாள் என சொல்லி நக்கல் அடித்து சிரிக்கின்றனர். செல்வி அதை எல்லாம் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

Follow our Instagram for more Latest Updates

மறுபக்கம் ராமமூர்த்தி வீட்டிற்கு வர ஈஸ்வரி தினமும் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார். அப்போது பாக்கியா வந்து சாப்பிட சொல்ல அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். இனியாவை பற்றி பாக்கியா கேட்க, ஜெனி அவள் சின்ன பெண் இல்லை எல்லாம் பார்த்துக் கொள்வாள் என சொல்கிறார். பின் செல்வி வந்து கோபி செகரட்டரி பேசியது பற்றி சொல்கிறார். உடனே ஈஸ்வரி அந்த கோபி ஏன் இப்படி செய்கிறான் என கேட்கிறார். பின் தெருவில் பெண்கள் கோபி விட்டு சென்றது பற்றி பேசுகின்றனர். அப்போது பாக்கியாவிற்கு அது பிடிக்கவில்லை.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – நாளை வெளியாகவுள்ள அசத்தலான அறிவிப்பு!

அந்த நேரம் பார்த்து இனியாவை கோபி பேசவிடாமல் செல்கிறார். அந்த பெண்கள் மகளை இப்படியா வளர்ப்பது என சொல்ல, உடனே பாக்கியா அவர்களிடம் கோவமாக பேசிவிட்டு கிளம்புகிறார். உள்ளே சென்று இனியா பேசாமல் இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறார். இனியாவை நினைத்து அழுகிறார். மறுபக்கம் எழில் அமிர்தா நிலா புகைப்படத்தை பார்த்து வருத்தப்படுகிறார். அப்போது செழியன் நீ அமிர்தாவை காதலிப்பதாக கேட்க ஆமாம் என் இஷ்டம் உனக்கு என்ன என எழில் கேட்கிறார். செழியன் உன் வாழ்கை மீது எனக்கு அக்கறை இருப்பதாக சொல்ல, யார் என்ன சொன்னாலும் நான் அமிர்தாவை திருமணம் செய்வேன் என எழில் சொல்கிறார். பின் இனியா வெளியே சென்று விட கோபி ராதிகா உடன் நெருக்கமாக இருக்கிறார். அப்போது பார்த்து இனியா வர ராதிகா கோபியை பிடித்து தள்ளிவிடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!