தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – நாளை வெளியாகவுள்ள அசத்தலான அறிவிப்பு!
தமிழகத்தில் வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு வழங்கும் பரிசுத்தொகுப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வந்தது. இந்த நிலையில் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போதைய திமுக ஆட்சியில் ரேஷன் கடைகள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அரசு ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு என்ன பரிசை வழங்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ட்விட்டர் நிறுவன ஊழியர்களுக்கு மஸ்கின் மாஸ் ஏற்பாடு – வீட்டிற்கே செல்ல தேவையில்லை!
Follow our Instagram for more Latest Updates
ஏற்கனவே வெளியான தகவல்களின்படி கடந்த ஆண்டு போல நடப்பு ஆண்டும் 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். மேலும் நடப்பாண்டு பணப்பரிசு மட்டும் வழங்கப்படும் என்ற பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நாளை (டிச.06) 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.