எல்லை மீறி நடந்த ராதிகா இனியா சண்டை.. வீட்டை விட்டு போக முடிவெடுத்த ராதிகா – கோபிக்கு வர போகும் சிக்கல்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், அனைவரும் எதிர்பார்த்தது போல இனியாவிற்கும் ராதிகாவிற்கும் சண்டை தொடங்கிவிட்டது. அதில் கோபி இனியாவிற்கு ஆதரவாக பேச அதனால் ராதிகா நான் வீட்டை விட்டு போகிறேன் என சொல்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியல் தினமும் ட்விஸ்ட் காட்சிகளுடன் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்கியாவை கஷ்டப்படுத்திவிட்டு இனியா கோபி உடன் சென்று விடுகிறாள். மறுபக்கம் தாத்தா இனியாவை பார்த்துக் கொள்ள ராதிகா வீட்டிற்கு செல்கிறார். குடும்பத்தில் அவர்கள் இல்லாமல் ஈஸ்வரி வருத்தத்தில் இருக்கிறார். இந்நிலையில் இனியாவிற்கு ராதிகாவை சுத்தமாக பிடிக்கவில்லை. ராதிகா இனியாவை நன்றாக பார்த்துக்கொள்ள நினைக்கிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆனால் இனியாவிற்கு ராதிகாவை பிடிக்கவில்லை. இந்நிலையில் இருவருக்கும் எப்போது சண்டை வரும் என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதன் படி இருவருக்கும் சண்டை தொடங்கிவிட்டது. ராதிகாவை இனியா மதிக்காமல் இருக்க அதனால் ராதிகாவுக்கு பயங்கர கோவம் வருகிறது. அதனால் அவர் இனியாவை கேள்வி கேட்க, நீங்க ஒன்னும் என் அம்மா இல்லை என இனியா சொல்கிறார். அப்போது கோபி வர அவரிடம் ராதிகா நடந்ததை சொல்கிறார்.
தமிழக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு – ஆங்கில பயிற்சிக்கு முக்கியத்துவம்!
Exams Daily Mobile App Download
இனியா கோபியிடம் என்னை கேள்வி கேட்க இவர் யார் என கேட்கிறார். பின் கோபியிடம் உங்களுக்கு நான் முக்கியமா இல்லை இவங்க முக்கியமா என கேட்க, உடனே கோபி எனக்கு முதலில் நீ தான் முக்கியம் என சொல்கிறார். அதை கேட்ட ராதிகா கோவப்பட்டு இனிமேல் நான் உங்களுடன் வாழ மாட்டேன் என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே போறேன் என சொல்கிறார். அதனால் கோபி நிலைமை மோசமாக இருக்கிறது.