தமிழக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு – ஆங்கில பயிற்சிக்கு முக்கியத்துவம்!
தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி வழங்கப்பட வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக அரசு முடிவு செய்துள்ளது.
ஆங்கில பயிற்சி:
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஏகப்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி வழங்கப்பட வேண்டும் என அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக அரசு பள்ளிகளை குறைவாக மதிப்பிட்ட மக்களுக்கு கொரோனா காலகட்டத்தில் அரசு பள்ளிகள் தான் கை கொடுத்தது. அதனால் ஏகப்பட்ட மக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கிறது. மேலும் அரசு பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களை வரவழைக்கும் நோக்கில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாநகராட்சி பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி வழங்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு ‘மன்னிப்பு’ – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசும் திறனை கொண்டு வளரும். அது மட்டுமில்லாமல் மாநில வரலாறு, கலாச்சாரம் போன்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் கலந்துரையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு ஆங்கிலம் மீது உள்ள அச்சம் நீங்கி, அவர்களும் சரளமாக ஆங்கிலம் பேச வழிவகை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.