தடை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு ‘மன்னிப்பு’ – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

0
தடை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு 'மன்னிப்பு' - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
தடை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு 'மன்னிப்பு' - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
தடை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு ‘மன்னிப்பு’ – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் பல அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் எலான் மஸ்க் பல ட்விட்டர் கணக்குகளை தடை செய்த நிலையில் அதற்கு பொது மன்னிப்பு அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க் அறிவிப்பு:

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பின் ஏகப்பட்ட மாற்றங்களை அவர் அறிவித்துள்ளார். பல ட்விட்டர் கணக்குகளை அவர் தடை செய்தார். அது மட்டுமில்லாமல் ஆட்குறைப்பு, வேலை நேரத்தை அதிகரித்தல் போன்ற அமைப்பு ரீதியான மாற்றத்தை அவர் அறிவித்தார். ட்விட்டரின் 7,500 ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார்.

தமிழக விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு அறிவிப்பு – விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் இதோ!!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ட்விட்டரில் எந்தவொரு சட்டத்தையும் மீறாத அல்லது மோசமான ஸ்பேமில் ஈடுபடும் பயனர்களின் கணக்குகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் வரும் கருத்துக்கள் அடிப்படையில் அடுத்த வாரம் முதல் இடைநிறுத்தப்பட்ட கணக்குகளுக்கு “பொது மன்னிப்பு” வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார். அந்த வகையில் 72.4 சதவீத பயனர்கள் பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஆதரவாக வாக்களித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் 27.6 சதவீதம் பேர் அதற்கு எதிராக வாக்களித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!