என் வீட்டை விட்டு வெளியே போடி.. சண்டை முற்றி இனியாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ராதிகா!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. ராதிகா இனியா இடையே சண்டை வருகிறது. அதனால் ராதிகா இனியாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல போகிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. வீட்டை விட்டு இனியா சென்றது முதல் குடும்பத்தில் அனைவரும் வருத்தத்துடன் இருக்கின்றனர். ஆனால் ராமமூர்த்தி இனியாவிற்கு பாக்கியாவின் அருமையை புரிய வைத்து கொண்டே இருக்கிறார். இந்நிலையில் ராதிகாவை இனியாவிற்கு சுத்தமாக பிடிக்காமல் இருக்கிறது. இருவருக்கும் எப்போது சண்டை வரும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இன்றைய எபிசோடில் இனியாவிடம் ராதிகா பேச ஆனால் இனியா என்னால் உங்களுக்கு பதில் சொல்ல முடியாது நீங்க எனக்கு யார் என கேட்கிறார். மேலும் மயூரா கோபியை டாடி என அழைப்பதும் இனியாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது. ராதிகா இனியாவிற்கு பிடிக்காத சாப்பாட்டை செய்து வைத்திருக்க, உடனே இனியா இதை என்னால் சாப்பிட முடியாது என சொல்கிறார். அதனால் கோபி ராதிகாவிடம் கோவமாக பேச, நான் பேசினால் இனியாவிற்கு பிடிக்காமல் இருக்கிறது அப்பறம் என்னால் என்ன செய்ய முடியும் என கேட்கிறார்.
காதல் திருமணத்திற்கு பிறகு சன் டிவி சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள டாப் நாயகி – விரைவில் ப்ரோமோ!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் ராதிகா இனியாவிற்கு காபி கொடுக்க ஆனால் இனியா அதை குடிக்காமல் இருக்கிறார். அதனால் ராதிகா கோவமாக பேச, அந்த நேரம் கோபி வருகிறார். இனியா கோபியிடம் உங்களுக்கு நான் முக்கியமா இல்லை அவங்க முக்கியமா என கேட்க, உடனே ராதிகாவுக்கு பயங்கர கோவம் வருகிறது. அதனால் ராதிகா இனியாவை இனிமேல் இந்த வீட்டில் இருக்க கூடாது வெளியே போ என சொல்கிறார். இந்த பரபரப்பு காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.