தமிழகத்தில் 1,250 கால்நடை மருத்துவர் காலிப்பணியிடங்கள் – விவசாயிகள் கவலை!
தமிழகத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு தகுந்த நேரத்தில் சிகிக்சை அளிக்க முடியாத விசாயிகள் உள்ளனர். தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்
தமிழக்த்தில் தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பத்து ஆண்டுகளாக காலியாக உள்ள உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு தகுந்த நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத விவசாயிகள் உள்ளனர்.
IPL 2021: SRH vs RR – ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!!
இந்த கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறையால் போலி மருத்துவர்கள் அதிகரித்துள்ளனர். இவர்கள சிகிக்சை அளிப்பதால் கால்நடைகள் பாதிப்புள்ளாகியுள்ளனர். பல ஆண்டுகள் கால்நடைமருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால் 10 மருத்துவமனைகளுக்கு 1 மருத்துவர் பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் 2980 கால்நடை மருத்துவர்கள் தேவை உள்ளது. ஆனால், 1100 மருத்துவர்கள் மட்டுமே நிரந்தர பணியில் பணியில் உள்ளனர்.
ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
இது குறித்து கால்நடை மருத்துவர் சங்க மாநில பொது செயலாளர் கூறியதாவது, ‘தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கால் பணியிடங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் அரசு உள்ளது. வழக்கியினை விசாரித்து தீர்வு கண்டால் 90 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படும்.