அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி?
இந்தியாவில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக ரேஷன் ஆதார் எண்ணை இணைக்கலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் – ஆதார்:
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, பருப்பு, கோதுமை, மளிகை பொருட்கள், எண்ணெய் போன்ற வீட்டு உபயோக பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் குறைந்த விலையில் பெற்று பயனடைகின்றனர். இந்திய அரசின் இந்த திட்டத்தால் ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர். கடந்த 2021 ஏப்ரல்,மே மாதங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் போது மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் இலவச மளிகை பொருட்களை வழங்கியது.
தமிழகத்தில் பள்ளிகள் திறந்தும் வகுப்புக்கு வராத மாணவர்கள் – ஷாக் ரிப்போர்ட்!
அதனை தொடர்ந்து வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமும் அமலில் உள்ளது. இந்த திட்டம் மூலம் வெளி மாநிலங்களில் தங்கி பணி புரிபவர்கள் பயனடைந்து வருகின்றனர். பயோமெட்ரிக் முறை மூலம் பதிவு செய்யப்பட்டு இவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகவும், ஆப்லைன் மூலமாகவும் ஆதார் எண்ணை ரேஷன் அட்டையுடன் இணைக்கலாம்.
கர்நாடகாவை சேர்ந்த கல்லூரி மாணவி முஸ்கானுக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிப்பு – ஹிஜாப் சம்பவம்!
குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையின் நகல் குடும்ப தலைவரின் புகைப்படம் ஆவணங்களை ரேஷன் அலுவலகம் அல்லது ரேஷன் கடையில் சமர்ப்பிக்கவும். நீங்கள் கொடுத்த தகவல்களை சரிபார்க்கபட்ட பின் ரேஷன் கார்டு வெற்றிகரமாக ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும். இணைக்கப்பட்டவுடன் உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும். ஆன்லைன் மூலமாக இந்த வேலையை செய்ய முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்லவும். அதில் ரேஷன் கார்டு என்ற விருப்பத்தை தேர்வு செய்து ரேஷன் அட்டை எண், ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணை உள்ளிடவும், பிறகு உங்கள் ரேஷன் கார்டு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டு விடும்.