தனது காதலை வெளிப்படையாக சொன்ன வெண்பா, மறுத்த பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியல் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா ரோஹித் திருமண ஏற்பாடுகளை ஷர்மிளா செய்து வருகிறார். இந்நிலையில் வெண்பா நான் பாரதியை தான் காதலிப்பதாக சொல்ல ஆனால் பாரதி அதில் விருப்பம் இல்லை என சொல்லி விடுகிறார் அதனால் நான் தப்பு பண்ணிட்டேன் என வெண்பா கண்ணம்மாவிடம் வருத்தமாக பேசுகிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது புது கதாபாத்திரங்கள் என்ட்ரிக்கு பின் கதைக்களம் சூடு பிடித்துள்ளது. வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என அமெரிக்காவில் இருந்து வந்த ஷர்மிளா அவருக்கு பொருத்தமான மாப்பிள்ளை பார்த்திருக்கிறார். ரோஹித்திற்கு வெண்பா பற்றிய எல்லா உண்மையும் தெரிந்தும் கூட வெண்பாவை தான் திருமணம் செய்வேன் என பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே ஹேமா அப்பா யாருக்கு விவாகரத்து கொடுக்க இருக்கிறார் என்ற குழப்பம்.
Exams Daily Mobile App Download
மேலும் இன்னும் சில நாட்களில் பாரதி கண்ணம்மா விவாகரத்து கேஸ் வர இருக்கிறது. அதில் பாரதி நினைத்தது போல விவாகரத்து கிடைத்துவிடுமா என்பது எல்லாம் இனி வரும் கதைக்களமாக இருக்கிறது. தற்போது ஷர்மிளா வெண்பா ரோஹித் திருமணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் பாரதி கண்ணம்மா சௌந்தர்யா என அனைவரும் வர மேடையில் ஷர்மிளா ரோஹித்தை அறிமுகம் செய்து வைக்கிறார்.
ஆனால் வெண்பா நான் பாரதியை காதலிப்பதாக சொல்ல பாரதி தனக்கு இதில் துளி கூட விருப்பம் இல்லை என சொல்கிறார். அதனால் வெண்பாவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை. பாரதியின் வெளிப்படையான பேச்சால் சௌந்தர்யா சந்தோசப்படுகிறார். வெண்பா அம்மா சென்ற பின் ரோஹித் வெண்பாவின் மனதை மாற்றி திருமணம் செய்து கொள்வாரா என்பது தான் இனி வரும் பெரிய திருப்பமாக இருக்க போகிறது.