ஒரு வருகைக்கு ரூ.1000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு அரசு, சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ்இயங்கும் 7 அரசு 7 அரசினர் கூர்நோக்கு இல்லங்கள் (சென்னை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, சேலம், கடலூர், மதுரை மற்றும் கோயம்பத்தூர்) மற்றும் இரண்டு அரசினர் சிறப்பு இல்லங்களில் (சென்னை மற்றும் காஞ்சிபுரம்) தங்கியுள்ள சிறுவர்கள் /
சிறுமியர்களுக்கு ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 12.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | வேலூர் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து துறை |
பணியின் பெயர் | ஆற்றுப்படுத்துநர் |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.10.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வேலூர் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து துறை காலிப்பணியிடங்கள்:
வேலூர் சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஆற்றுப்படுத்துநர் கல்வி தகுதி:
இப்பதவிக்கு, தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்ற நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
தெரிவு செய்யப்படும் உளவில் / ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் (ஒரு வருடத்திற்கு 60 நாட்களுக்கு மிகாமல் / வாரம் ஒருமுறை) மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்குப் போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- (ரூபாய் ஒராயிரம் மட்டும்) வழங்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் 12-10-2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்